சுவாமிமலையில் தனித்திறன் சிலம்பம் போட்டி
கும்பகோணம், ஜூன் 21 - தமிழக அரசு தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பக் கலையை அங்கீகரித்து, அரசுப் பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீடு அளித்ததை தொடர்ந்து ஏராளமான சின்னஞ்சிறு குழந்தைகள் ஆர்வமாக சிலம்பாட்டத்தைக் கற்று வருகின்றனர். கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் சோழர் சிலம்பம் கழகம் சார்பில் இரண்டாமாண்டு தனித்திறன் சிலம்பம் போட்டி பழைய முருகன் தியேட்டரில் சோழ சிலம்ப கழக பொதுச் செயலாளர் தலைமை ஆசான் குமார் தலை மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், கள்ளக் குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஓபன் தனித்திறன் சிலம்பு போட்டியில் 5 வய திலிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்ட னர். இதில் பல்வேறு வயதுப் பிரிவினருக்கு போட்டிகள் நடைபெற்றன. போட்டியானது வயதுவாரியாக 6 பெரும் பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு நினைவு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன. பல்வேறு மாவட்டத்திலிருந்து பங்கேற்ற குழந்தைகள் சிறப்பாக சிலம்பம் சுற்றி பரிசுகளை தட்டிச் சென்றனர்.
அனுமதியின்றி மது விற்பனை: களத்துமேடு பெண்கள் புகார்
தஞ்சாவூர், ஜூன் 21- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மரக்காவலசை ஊராட்சி மரக்காவலசை களத்துமேடு பகுதி பெண்கள் கையெழுத்திட்டு, பேராவூரணி வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: “மரக்காவலசை பகுதியில் குறிப்பிட்ட சில நபர்கள் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் எங்கள் பகுதி ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, குடும்பச் சச்சரவுகள் அதிகமாக நடைபெறுகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும், அனுமதியின்றி மது விற்பவர்களை தட்டிக் கேட்கும் பெண்களை மிரட்டுகின்றனர். எனவே, தாங்கள் உடனடி யாக இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொழிற்சங்க அரசியல் பயிற்சி வகுப்பு
திருச்சிராப்பள்ளி, ஜுன் 21 - தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்க மாநில தொழிற்சங்க அரசியல் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பிற்கு சாலையோர வியாபாரிகள் சங்க பொதுச் செய லாளர் சந்தியாகு தலைமை வகித்தார். சிஐடியு மாநில செய லாளர் ஜெயபால் துவக்க உரையாற்றினார். சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மற்றும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் சட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, தொழிலாளி வர்க்கம் சந்திக்கும் பிரிவினைகளும் நமது அணுகுமுறையும் என்ற தலைப்பில் சிஐடியு மாநில உதவி பொதுச் செயலாளர் கண்ணன், ஸ்தாபன விரிவாக்கம் குறித்து மாநில கன்வீனர் கருப்பையன் ஆகியோர் பேசினர். முன்னதாக தரைக்கடை சங்க திருச்சி மாவட்ட தலைவர் கணேசன் வர வேற்றார். மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் செல்வி நன்றி கூறினார்.
பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் காதல் தம்பதி தஞ்சம்
அரியலூர், ஜூன் 21 - அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த் (24). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துள்ளார். இவர் அதே பகுதி தெற்கு தெருவைச் சேர்ந்த விந்தியா (20) என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பெண்ணின் பெற்றோரிடம் பெண் கேட்டதாக கூறப்படு கிறது. பெண் கொடுக்க மறுத்ததால் விந்தியாவை பிரசாந்த் கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமான் மாரியம்மன் கோயிலில் வைத்து திருமணம் முடித்துள்ளார். பின்னர் தனது நண்பர் வீட்டில் தங்கிவிட்டு, திங்களன்று பெண்ணின் பெற்றோருக்கு பயந்து இந்த புதுமணத் தம்பதி பாதுகாப்பு கேட்டு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் சுமதி புதுமணத் தம்பதி களிடம் விசாரணை நடத்தி இரு தரப்பு பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த பெண்ணின் பெற்றோர், ‘தங்களின் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்ததால்’ வர மறுத்து விட்டனர். இந்நிலையில் பிரசாந்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த போது, அவர்களுக்கு அறிவுரை கூறி காதல் தம்பதியை பிரசாந்தின் பெற்றோ ருடன் அனுப்பி வைத்தனர்.
கும்பகோணம், சுவாமிமலை காவல் நிலைய செயலை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், ஜூன் 21 - கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் மற்றும் சுவாமிமலை காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரில் தொடர்புடைய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் இருக்கும் இந்த இரு காவல் நிலையத்தையும் கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்பகோணம் அருகே சுவாமிமலையில் வழக்கறிஞர் சங்க உறுப்பினரான வழக்கறிஞர் சுந்தரை வெட்ட முயன்ற நபர் குறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்தும், ஒரு மோசடி புகார் குறித்து வழக்கறிஞர்கள் சங்க விசாரணைக்கு ஆஜராக மறுத்ததுடன், வழக்கறிஞர் சங்க தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர்கள் பூம்பொழில், ராஜசேகர் ஆகியோர் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. எனவே இதனை கண்டித்தும் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஏராளமான வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராஜசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.