இல்லம் தேடி கல்வி மையம் திறப்பு
அறந்தாங்கி, ஜன.4 - புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி வடக்கூர் கிராமத்தில், மண மேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி இல்லம் தேடி கல்வி மையம் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலை வர் சீனியார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வீரப்பன் முன்னிலை வகித்தனர். மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் வரவேற்று பேசினார். மணமேல்குடி ஒன்றியக்குழு உறுப்பினர் லலிதா ராமச்சந்தி ரன், காரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வெண்ணிலா சேதுராமலிங்கம், மணமேல்குடி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா நடேசன், வெள்ளூர் ஊராட்சி மன்ற தலை வர் ஜெயராணி, தன்னார்வலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்ட னர். வடக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வி நன்றி கூறினார். அரியலூர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை திங்கள்கிழமை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவங்கி வைத்தார். இதில் வட்டார கல்வி அலுவலர் அசோகன் மற்றும் சாந்திராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், குணசேகரன். பள்ளி ஆய்வாளர் செல்வகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இல்லம் தேடி கல்வி மோகன், ஊராட்சி மன்ற தலைவர் கதிர் வேல். ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.
லயன்ஸ் சங்கம் உதவி
தஞ்சாவூர், ஜன.4 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த வீரராகவ புரம் கிராமத்தில், கடந்த சனிக்கிழமை இரவு பெய்த கனமழை யில் கருப்பையன் என்பவர் வீடு இடிந்த விழுந்தது. இதில் நல் வாய்ப்பாக குடும்பத்தினர் காயமின்றி உயிர் தப்பினர். இந்நிலையில், வீடிழந்த கருப்பையாவுக்கு, பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ரூ. 3 ஆயிரம் மதிப்பி லான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகிய வற்றை லயன்ஸ் சங்கத் தலைவர் வ.பாலசுப்பிரமணியன், சாசனத் தலைவர் நீலகண்டன், மண்டல ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் வழங்கி னார்.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் மீட்பு
அரியலூர், ஜன.4 - திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த கௌதம் (25) பொறியியல் படித்து விட்டு ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள கோழி பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலை யில் ஞாயிறன்று வேலை முடிந்து அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தை அடுத்து தா.பழூர் அருகே உள்ள மத னத்தூர் கொள்ளிட ஆற்றில் மூன்று இளைஞர்கள் குளித்து விட்டு ஆற்றைக் கடந்த போது கௌதம் மட்டும் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். தண்ணீர் வேகமாக சென்ற தால், நண்பர்களால் அவரை காப்பாற்ற இயலவில்லை. இதுகுறித்து நண்பர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன்படி, காவல் ஆய்வாளர் ஜெகதீசன் தலை மையிலான போலீசார் ஆற்றில் இறங்கி தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் கௌதமை கண்டுபிடிக்க இயல வில்லை. இதையடுத்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் கரை ஓரங்களி லும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மூன்றாவது நாளான செவ்வாயன்று, கொள்ளிடம் கூட்டு குடிநீர் நீரூந்து நிலையம் அருகே சுமார் 100 மீட்டர் தொலைவில் ஆற்றில் மிதந்த நிலையில் அவரது உடலை மீட்டனர். இதையடுத்து கௌதமின் உடல் உடற் கூராய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் கௌதமின் உடல் உற வினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு
திருவாரூர், ஜன.4 - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு வழக்கு பணியாளர்கள் 4 பணியிடங்களும், பல்நோக்கு பணி யாளர் 1 பணியிடமும், இரவு காவலர் 1 பணியிடமும் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளது. எனவே, திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த மகளிர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இப்பதவிகளுக்கான மாதிரி விண்ணப்பம் திருவா ரூர் மாவட்ட இணையதளத்தில் https://tiruvarur.nic.in பதி விறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சி யர் அலுவலக இணைப்பு கட்டிடம், தரைத்தளம், திருவாரூர் 613 004 என்ற முகவரிக்கு பதிவஞ்சலில் 25.1.2022 பிற்பகல் 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: சிபிஎம், பொதுமக்கள் மறியல்
தஞ்சாவூர், ஜன.4 - கடந்த மூன்று நாட்க ளாக தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் பெய்து வந்த கனமழை கார ணமாக மழைநீர் வீடுகளுக் குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். அதிராம்பட்டினம் பிலால் நகர், ஹாஜா நகர், முத்தம்மாள் தெரு, பழஞ் செட்டி தெரு, நரிக்குறவர் காலனி உள்ளிட்ட தாழ் வான பகுதிகளில், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் நகரின் மையப் பகுதியில் உள்ள காவல் நிலை யத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. பிலால் நகர் பட்டியலின மக்கள் வசிக்கும் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றப் படாமல் இருப்பதால் அப்ப குதி பொதுமக்கள், பெண் கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர், ஞாயிறன்று மாலை கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடு பட்டனர். இதையடுத்து மழை பாதிப்பை பார்வையிட வந்த சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எஸ்.தமிழ் செல்வி, முறைசாரா தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், சிஐடியு மணல் மாட்டுவண்டித் தொழிலா ளர் சங்க தலைவர் சோம சுந்தரம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் மோரிஸ் அண்ணா துரை, மாதர் சங்கம் பொரு ளாளர் லட்சுமி ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பட்டுக் கோட்டை கோட்டாட்சியரை தொடர்பு கொண்டு தண்ணீர் தேங்கி நிற்பது குறித்து எடுத்துக் கூறினர். இதை யடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், பட்டுக்கோட்டை வட்டாட்சி யர் கணேஸ்வரன், அதி ராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை ஆகியோர், பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் பொக்லைன் இயந்திரத்தை கொண்டு வந்து, ஆக்கிர மிப்புகளை அகற்றி மழை நீரை வடிய வைத்தனர். இதையடுத்து சுமார் ஒன்றரை மணி நேரம் நடை பெற்ற போராட்டத்தை கை விட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பட்டிய லினத்தைச் சேர்ந்தவர் களுக்கு குடியிருக்க மனைப் பட்டா, வீடு, மின்சார வசதி செய்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
பாபநாசம்: கல்லூரியில் கருத்தரங்கம்
பாபநாசம், ஜன.4 - பாபநாசம் ராஜகிரி தாவூது பாட்சா கலை, அறிவியல் கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில் ‘உன்னுள் ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு ஆர்டிபி கல்வி குழும இயக்குநர் காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார். பட்டிமன்ற நடுவர் அண்ணா சிங்காரவேலு, தஞ்சா வூர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரிஜினல் மேலாளர் ஆல்வின் மார்டின், ஜோசப் ஆல்பர்ட் சிறப்புரையாற்றினர்.
அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு சோலார் நிறுவனத்திற்கு எதிராக விவசாயிகள் ஆட்சியரிடம் புகார்
திண்டுக்கல், ஜன.4- நிலக்கோட்டை அருகே அரசு நிலங் களை தனியார் சோலார் நிறுவனம் ஆக்கி ரமித்து உள்ளதாக கிராம மக்களும், விவ சாயிகளும் மனு நீதி நாளில் திண்டுக்கல் ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மனு நாளின் போது நிலக்கோட்டை அருகேயுள்ள மல்ல னம்பட்டி, பூசாரிபட்டி, நடகோட்டை உள் ளிட்ட 5க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மனுக் கொடுக்க வந்திருந்தனர். இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட 2 ஏக்கர் நிலம், 5க்கும் மேற்பட்ட குளங்கள், ஆள் துளை கிணறுகள் போன்றவற்றை தனியார் சோலார் நிறுவனம் ஆக்கிரமித்து உள்ளதாக ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர். விவ சாய நிலங்களை அடி மாட்டு விலைக்கு மிரட்டி வாங்குவதாக புகாரில் கூறியுள்ள னர். தற்போது 800 ஏக்கர் நிலம் வரை வாங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 600 ஏக்கர் நிலம் அரசாங்கம் கொடுத்த நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலம் என்றும், 200 ஏக்கர் மட்டுமே விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக 15 முறை ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றும் தெரிவித்தனர். (நநி)
செம்பருத்தி நகர் மக்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரிக்கை
தஞ்சாவூர், ஜன. 4 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சரபேந்திர ராஜன்பட்டி னம் ஊராட்சி செம்பருத்தி நகர் குடியிருப்பு பகுதியில், அண்மையில் பெய்த பெருமழை காரணமாக மழைநீர் புகுந்தது. இதனால், அங்குள்ள 40-க்கும் மேற்பட்ட குடும்பங் களைச் சேர்ந்த பொதுமக்கள், அருகில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் கோ.நீல மேகம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேலு, சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மல்லிப்பட்டினம் புயல் பாதுகாப்பு மையத் தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்க ளைச் சந்தித்து பேசினர். அப்போது, அவர்களுக்கு உரிய உணவு வசதி, தங்கும் வசதி செய்யப்படாமல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், இதுகுறித்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிர பாகரனுக்கு தகவல் தெரிவித்து, “உரிய வசதி கள் செய்து தர வேண்டும். மேலும், அப்பகுதி மக்களுக்கு மாற்று இடம், குடிமனைப்பட்டா வழங்க வேண்டும்” என வலியுறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த, பட்டுக் கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், வட் டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர், உடனடியாக உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர். மேலும், பாய், போர்வை ஆகியவை பொதுமக்க ளுக்கு வழங்கப்பட்டது. மாற்று இடம், குடி மனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
பெருநாவலூர் பாசன ஏரியின் வடிகாலை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
அறந்தாங்கி, ஜன.4 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவிற்கு பெருநாவலூர் கிராம பாசன ஏரியில் உள்ள வடிகால் முற்றாக உடைக்கப் பட்டு, ஏரி தண்ணீர் வீணாகிறது. இதற்கு காரணமான சமூக விரோதி கள் மீது நடவடிக்கை எடுக்காத ஆவுடை யார்கோவில் காவல்துறை மற்றும் பொதுப் பணித் துறையை கண்டித்தும், ஆக்கிர மிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் அறந்தாங்கி வருவாய் துறையை கண்டித்தும், சர்க்கையை சேதப்படுத்திவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஏரி பாசன விவசாயிகள் அறந்தாங்கி சார்ஆட்சியர் அலு வலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன் தலைமை வகித் தார். பெருநாவலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பக்ருதீன்அலி, ஊராட்சி மன்ற துணை தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட் டோர் பங்கேற்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் தினேஷ் குமார் மற்றும் பொதுப்பணித்துறை பொறியா ளர் ராமமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வடிகாலை உடைத்தவர் மீது உரிய நட வடிக்கை எடுக்கவும், உடைக்கப்பட்ட வடி காலை கட்டித்தரவும், ஏரியில் உள்ள ஆக்கிர மிப்பை இரண்டு மாதத்தில் அகற்றி தர உறுதி யளித்தனர். இதையடுத்து காத்திருப்பு போ ராட்டம் கைவிடப்பட்டது.
ரயில்வே சேவைகளை முறைப்படுத்த நுகர்வோர் மையம் கோரிக்கை
திருவாருர், ஜன.4 - தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் மாதாந் திர கூட்டம் மோசஸ் நடுநிலைப் பள்ளியில் மையத்தின் பெருந்தலைவர் முனைவர் எஸ். டி.அண்ணாதுரை தலைமையில் நடை பெற்றது. மையத்தின் பொதுச் செயலாளர் ஆர்.ரமேஷ் வரவேற்புரையாற்றினார். திருவாரூர் சுற்றுலா பயணிகள் மற்றும் ரயில் பயணிகளின் நலன் கருதி ரயில்வே சேவைகளை முறைப்படுத்தவும், புதிய வசதி களை கொண்டு வரவும் பல்வேறு கோரிக்கை களை முன்வைத்தும் நிறைவேற்றாமல் இருக் கிறது. இதனை ரயில்வே நிர்வாகத்தின் கவனத் திற்கு கொண்டுவர திருவாரூர் மாவட்டத்தில் இயங்குகிற அனைத்து பொது நல அமைப் புகளின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 2022 ஜனவரி இறுதியில் திருவாரூர் ரயில் நிலையம் முன்பு நடத்திட தீர்மானிக்கப் பட்டது. கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணத் தொகையை ஒன்றிய -மாநில அரசுகள் விரைவாக வழங்கிட கேட்டுக் கொள்கிறோம். கஜா புயலால் பாதிக் கப்பட்ட மின் கம்பங்கள் மாற்றப்பட்டு, பழைய மின்கம்பங்கள் அதே இடத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருப்பது அகற்றப் பட வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளையும் தூய்மைப்படுத்த வேண்டும். பாசிகள் தூசுகள் அதிகம் உள்ளதால் அந்த குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி உடல் நல குறைவு ஏற்படா வண்ணம் போர்க்கால அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குடிநீர் தேக்க தொட்டிகளை தூய்மைப்படுத்திட மாவட்ட நிர்வாகம், மாவட்ட குடிநீர் மேலா ண்மை மையம் மற்றும் கிராம ஊராட்சி நிர்வா கத்தினை கேட்டுக் கொள்கிறோம். திருவாரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லை பாதுகாக்க தமிழக முதல்வர் அறிவித்த புதிய சேமிப்பு கிடங்கை திருவாரூர் கிடாரங்கொண்டானில் செயல்ப டும் திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கு இருக்கும் இடத்தில் சேமிப்பு கிடங்கு விரை வில் அமைக்கப்பட வேண்டும் என விவசாயி கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.