தஞ்சாவூர், ஆக.19 - தஞ்சாவூர் மாவட்டம், பாப்பா நாடு பகுதியில் கடந்த 12 ஆம் தேதி, 23 வயது நிரம்பிய பட்டதாரி இளம் பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து ஒரத்தநாடு அனை த்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கவிதாசன், பிரவீன், திவாகர் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். நீதிமன்றம் நோட்டீஸ் எஸ்.பி. நடவடிக்கை இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த பட்டுக்கோட்டை தலைமை அரசு மருத்துவருக்கு விளக்கம் கேட்டு ஒரத்தநாடு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதே போல், சம்பவம் குறித்து வழக்கு பதி யாமலும், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் அலட்சி யமாக செயல்பட்ட பாப்பாநாடு உதவி பெண் காவல் ஆய்வாளர் சூர்யாவை ஆயுதப்படைக்கு பணி யிடமாற்றம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில், பாப்பாநாடு கடைத்தெரு பகுதியில், வணி கர்கள், கிராம மக்கள், பெண்கள் அனைத்து கட்சியினர் என நூற்றுக் கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாப்பாநாட்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப் பட்டு, கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது. இதையடுத்து அப் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு நிவாரணம், உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாப்பாநாடு பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையை கட்டுப் படுத்தி, குற்றச் செயல்களை தடுக்க வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப் பட்ட மேலும் இருவரை கைது செய்ய வேண்டும் என இந்தப் போராட் டத்தில் வலியுறுத்தப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார், ஒன்றியச் செய லாளர் எஸ்.கோவிந்தராஜ், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் அரங்கசாமி, சரவணன், பாஸ்கர், வர்த்தக சங்கத் தலைவர் சந்திரசேகர், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆர்.பன்னீர் செல்வம், பொருளாளர் ரெங்கசாமி, துணைத் தலைவர் சிதம்பரம், துணைச் செயலாளர் சந்தனவேல் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.