தஞ்சாவூர், ஏப்.9- இந்தியா கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ச.முரசொலிக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு, தஞ்சை விரைவு போக்குவரத்து பணிமனை யில் இருந்து சிஐடியு சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவரும், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலா ளருமான கே.வீரய்யன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் கே.அன்பு, இ.டி.எஸ்.மூர்த்தி, ஏ.ராஜா, சா.செங்குட்டுவன், எஸ்.மில்லர் பிரபு, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் கே.மதியழகன், விரைவுப் போக்கு வரத்து மாநில துணைத் தலைவர் பி.வெங்க டேசன், டிஆர்இயு சங்கச் செயலாளர் பி.ரஜினி, தரைக்கடை சங்க மாவட்டத் தலை வர் ஆர்.மணிமாறன், ஆட்டோ சங்க துணைத் தலைவர் செல்வம், சாலை போக்குவரத்து மாநிலக் குழு உறுப்பினர் பரத்ராஜன், தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்டச் செயலாளர் ரவிக்குமார், டாஸ்மாக் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர். இந்த பிரச்சார பயணக் குழு, தஞ்சை மாநகர் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் பொதுமக்கள், தொழிலாளர்களை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குச் சேக ரிப்பில் ஈடுபட்டு வருகிறது.