districts

யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது! பாபநாசத்தில் நாகைமாலி பிரச்சாரம்

பாபநாசம், ஏப்.16- மயிலாடுதுறை தொகுதியில் போட்டி யிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப் பினரும், சட்டமன்ற குழுத் தலைவருமான நாகைமாலி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “மயிலாடு துறை தொகுதியில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல;  யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை உறுதி செய்கிற தேர்தல். பாஜக மீண்டும்  ஆட்சிக்கு வந்தால், 19 ஆவது நாடாளு மன்றத் தேர்தல் நடக்காது. 10 ஆண்டு கால பாஜக ஆட்சி என்ன செய்தது? பெட் ரோல், டீசல், கேஸ் விலையை கடுமையாக உயர்த்தியது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை ஒன்றிய அரசு தரவில்லை.  ஜி.எஸ்.டி ஒரு மோசமான வரி. இதில் மாநில அரசிற்கான பங்குத் தொகையை பாஜக அரசு கொடுப்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்  சித்தாந்தத்தின் அரசியல் கட்சிதான் பா.ஜ.க. பல மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு  இணைந்து நிற்கிறது நமது நாடு. இந்தியா வைப் போல் வேறு எந்த நாடும் கிடையாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மொழி வாரி மாநிலங்கள் இருக்காது. தற்போது அதிமுக 5 கோஷ்டிகளாக உள்ளது. ஓ.பி.எஸ். நல்ல நடிகர். அதிமுக -வோடு கூட்டணி வைக்க யாரும் வரவில்லை.  தேமுதிக-வை பைனாகுலர் வைத்துப் பார்த்தால்கூட தெரியாது. பாமக, பாஜக கொள்கை கூட்டணி அல்ல. தேர்தல் முடி விற்குப் பின்னர் அதிமுக, பாமக  இருக்காது.  எனவே வேட்பாளர் சுதாவிற்கு கைச் சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய  வேண்டும்” என்றார்.  பிரச்சாரத்தில் பாபநாசம் ஒன்றியச் செய லாளர் முரளிதரன், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.