திருவாரூர், நவ.22 - திருவாரூர் மாவட்டம் தெற்கு வீதி ஆர்டிஓ ஆபீஸ் எதிரில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அமைப்பின் சார்பாக 10 ஆம் ஆண்டு மாபெரும் புத்தக கண்காட்சி வெள்ளியன்று திறந்து வைக்கப்பட்டது. கண்காட்சியை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா முன்னிலை வகித்தார். புத்தக கண்காட்சி யில் முதல் விற்பனையை ஒன்றிய பெருந்த லைவர் புலிவலம் தேவா வெளியிட மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சௌமியா பெற்றுக் கொண்டார். புத்தக கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின், ஆயிரத்திற் கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி ஒரு மாதம் நடைபெறுவதாக தெரிவிக்கப் பட்டது.