districts

img

வாடகையில் இயங்கும் தரங்கம்பாடி நூலகத்தை டேனிஷ் கவர்னர் மாளிகைக்கு மாற்ற வேண்டும்

மயிலாடுதுறை, ஜூலை 29-  வாடகையில் இயங்கும் தரங்கம்பாடி நூலகத்தை 3 ஆண்டுகளுக்கும் மேலாக  பூட்டியேக் கிடக்கும் டேனிஷ் கவர்னர் மாளிகை கட்டிடத்திற்கு மாற்ற வேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது. டேனீஷ் ஆட்சி காலத்தில் டேனிஷ்  நாட்டின் (டென்மார்க்) கலை நுணுக்கத்து டன் கவர்னர் தங்குவதற்காக 1785-ஆம்  ஆண்டு தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு  எதிர்புறம் கவர்னர் மாளிகை கட்டப்பட்டது. அங்கு 10 டேனிஷ் கவர்னர்கள் தங்கி ஆட்சி  புரிந்துள்ளனர்.  அதன் பிறகு ஆங்கிலேயர் ஆட்சி காலத் தில் 1845-ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர் களின் அலுவலகமாக இது பயன்பட்டு வந்தது. பிறகு மாவட்ட நீதிமன்றமும், அமர்வு  நீதிமன்றமும் செயல்பட்டு வந்தது. 1947- ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த  பின் இந்த மாளிகை உப்பள அலுவலகமாக செயல்பட்டு வந்தது. அதன் பின் மத்திய தொல் பொருள் ஆய்வு அலுவலகமாக செயல் பட்டிருக்கிறது. தற்போது இந்த கவர்னர் மாளிகை தமிழக  அரசின் சுற்றுலாத் துறை வசம் உள்ளது.  பழுதடைந்து கிடந்த இந்த மாளிகையை டென்மார்க் நாட்டு தேசிய அருங்காட்சியகம், தமிழக அரசின் சுற்றுலாத் துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 2008-ஆம் ஆண்டு ரூ.85 லட்சம் செலவில் புதுப்பிக்கபட்டது. கம்பீரமாக உள்ள டேனிஷ் கட்டிடக் கலையை தாங்கி நிற்கும்  இந்த கவர்னர் மாளிகை இப்பொழுது எந்த பயன்பாடும் இல்லாமல் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே கிடந்து சிதிலமடைந்து வருகிறது. வட்ட தலைமை நூலகத்தை கவர்னர் மாளிகைக்கு மாற்ற வேண்டும்.  தரங்கம்பாடி வட்ட தலைமை நூலகக்  கட்டிடம் பழுதடைந்து இடிந்து  விழுந்ததை யடுத்து அந்த நூலகம் வாடகை கட்டிடத்தில்  இயங்கி வருகிறது. சொந்த இடம் இருந்தும்  நூலகத்திற்கு இதுவரை புதிய கட்டிடம் கட்டப் படவில்லை.  வாடகை கட்டிடத்தில் 5 ஆண்டுகளுக்கும்  மேலாக இயங்கி வரும் வட்ட நூலகத்தை தரங்கம்பாடி கடற்கரையில் பூட்டியே கிடக் கும் கவர்னர் மாளிகைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட துணைத்தலைவர் என்.எஸ்.உதயக் குமார் மற்றும் பொதுமக்கள், நூலக வாச கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.