திருச்சிராப்பள்ளி, ஜன.6- திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் வாழவந்தான் கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர், அம்பேத்கர் நகர், லூர்து நகர் ஆகிய பகுதி மக்களுக்கு பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தி யதன் விளைவாக 30.09.2015 அன்று சுமார் 63 பேருக்கு 1 சென்ட் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இது நாள் வரையில் அந்த இடங்களை எப்.எம்.பி-ல் பதிவு செய்யவோ, அடங்கலில் ஏற்றவோ இல்லை. பல முறை அதிகாரிகளை சந்தி த்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாத நிலையில், புதனன்று மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜன், விவ சாய சங்க தலைவர் சங்கிலி முத்து, வாழவந்தான் கோட்டை பெரியார் நகர் கட்சி கிளை செயலாளர் கருணாநிதி ஆகி யோர் மாவட்ட ஆட்சியர் சிவராசை சந்தித்து மனு அளித்தனர். அதன் அடிப்படையில் வியாழ னன்று பி.டி.ஓ, தாசில்தார், மாவட்ட சர்வேயர்கள், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு சர்வே எண் 262, 263, 270 உள்ளடக்கிய நத்தம் நிலங்களை அளந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்போது திருவெறும்பூர் தாலுகா செய லாளர் மல்லிகா, கிளை செயலாளர் கருணாநிதி, விவசாய சங்க தலைவர் சங்கிலி முத்து, ஒன்றிய குழு உறுப்பி னர் அன்பழகன் ஆகியோர் உடனி ருந்தனர்.