districts

img

குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதியின்றி தவிக்கும் அப்பராசப்புத்தூர் மக்கள்

மயிலாடுதுறை, டிச.26 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே யுள்ள மாமாகுடி ஊராட்சி,  அப்ப ராசப்புத்தூரில் அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லா மல் 16 ஆண்டுகளாக அவதிய டைந்து வரும் பொதுமக்கள் செவ்வாயன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பராசப்புத்தூர் கிராமம் காலனித் தெருவில் வசிக்கும் செங்கோடன் என்பவ ரது குடிசை வீடு செவ்வாயன்று காலை தீ  விபத்தில் எரிந்து நாசமானது. தகவலின் பேரில் வந்த தீயணைப்பு வாகனம் கிராமத் திற்கு வர வழியில்லாததாலும், ஊராட்சி மூலம் தண்ணீர் வசதியும் இதுவரை செய்து தராததாலும் தீயை அணைக்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். வீடு முழுவதும் எரிந்து, வீட்டிலிருந்த பல  லட்ச ரூபாய் பொருட்கள் கருகின. மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பல  கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்ப ராசப்புத்தூர் காலனி தெருவில் குடியிருக்க இடம்பெற்று வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பத்தினருக்கு கடந்த 16 ஆண்டுகளாக வீட்டுவரி ரசீது, தெருவிளக்கு, பொது குடிநீர் வசதி, சாலை என எந்தவொரு அடிப்படை வசதி களையும் ஊராட்சி நிர்வாகம் செய்து தரா மல் அலட்சியம் காட்டுகிறது.  பலமுறை வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் நேரிலும், மனுக்கள் வாயிலாகவும் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில் தான் செங்கோடன் என்ப வரது வீடு எரிந்து சாம்பலானது. அரசுத் துறை யின் அலட்சியப் போக்கால்தான் விபத்து ஏற்பட்டதாகவும், அடிப்படை வசதிகளை உட னடியாக செய்து தரக் கோரியும், மார்க்சி ஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியச்  செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் அப்பராசப்புத்தூரில் (நாகை -சென்னை தேசிய நெடுஞ்சாலை) சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் டி.  கண்ணகி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், கிளை செயலாளர்கள், கிராம பஞ்சா யத்தார்கள் உள்ளிட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து போராட்டக் களத்திற்கு வந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன்  மற்றும் துணை வட்டாட்சியர், ஊரக வளர்ச்சி  துறை, காவல்துறை அதிகாரிகள், வருவாய்  ஆய்வாளர் அதிகாரி, கிராம நிர்வாக அதிகாரி  ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடனடியாக நடவடிக்கை  எடுப்ப தாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.