districts

img

கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி

தஞ்சாவூர், ஜூன் 21-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி திருமண  மண்டபத்தில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முர சொலி வியாழக்கிழமை கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து  தேர்தல் தேர்தல் வெற்றிக்கு களப் பணியாற்றியமைக்கு நன்றி  தெரிவித்து பேசினார்.  அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாடு முதல மைச்சர் வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக் கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்  என உத்தரவிட்டுள்ளார். என்னை மூன்று லட்சத்திற்கும் அதிக மான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த உங்கள்  அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஊராட்சி வாரியாக பொதுமக்களை சந்தித்து நன்றி  தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. உங்கள் ஒத்து ழைப்புக்கு நன்றி. உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, முதலமைச்சர் உதவி யோடு அனைத்தையும் நிறைவேற்றி தருவேன்” என்றார். நிகழ்ச்சியில் தோழமைக் கட்சியினர் கலந்து கொண்டனர்.