சென்னைக்கு அருகில் பூந்தமல்லியில் உள்ள பாரம்பரிய கட்டிடம் விரைவில் புதுபொலிவுபெற வுள்ளது. விக்டரி நினைவு பார்வையற் றோர் பள்ளியில், 131 ஆண்டுகள் பழமையான கட்டிடம் உள்ளது. இது சென்னையில் உள்ள மிக பழமையான கட்டிடங்களில் ஒன்று. இந்த கட்டிடத்தை ரூ.24.20 கோடி யில் புனரமைக்க, பொதுப் பணித்துறை முன்மொழிவுகளை தயாரித்து வருகிறது. பொதுப்பணித்துறையின் கட்டிட மையம் மற்றும் பாதுகாப்பு பிரிவு இந்த கட்டிடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் விரைவாக சிதிலமடைவதில் இருந்து பாது காக்கும் வகையிலும் முன்னுரிமை அடிப்படையில் இக் கட்டிடத்தை புனரமைக்க திட்டமிட்டுள்ளது. 58,200 சதுர அடியில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த சிவப்பு செங்கல் கட்டிடம் பழுதடைந்ததன் காரணமாக கூரை மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளது. இருப்பினும், கட்டிடத்தின் மைய கட்டுமானம் உறுதியாக இருப்ப தாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிவப்பு செங்கல் கட்டிடத்தின் கட்டுமானம் 1888 இல் தொடங் கப்பட்டு 1893 இல் நிறைவடைந்தது. கட்டிடத்தைப் பற்றிய கல்வெட்டு களுடன் கூடிய கற்பலகை வளா கத்தில் கடந்த காலத்தின் சாட்சி யமாக உள்ளது. இந்த வளாகத் தில் பார்வையற்ற மாணவர்களு க்கான பள்ளியும், மாற்றுத் திறனாளி களுக்கான மாநில ஆணையரின் கீழ் செயல்படும் பள்ளியும் உள்ளது. பாரம்பரிய கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டியுள்ளதால் சுமார் 110 மாணவர்கள் மற்றும் கிட்ட த்தட்ட 20 ஆசிரியர்களுக்கான வகுப்புகள் அதே வளாகத்தில் அரு கிலுள்ள கட்டிடங்களில் நடத்தப் படுகின்றன. உயரமான அதே நேரத்தில் ஒரே மாடி கொண்ட இந்த கட்டிடம் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்டது.கட்டிடத்தில் உள்ள மர துப்பாக்கி ரேக்குகள் கடந்த கால வரலாற்றின் நினைவுகூறும் வகை யில் உள்ளன. பள்ளியை நடத்துவதற்காக இந்த கட்டிடம் 1931 ஆம் ஆண்டு சென்னை மாற்றுத்திறனாளிகள் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு, சென்னை மாகா ணம் இந்த கட்டிடத்தை தன் வசம் எடுத்துக் கொண்டது. பதிவு களின்படி, 1948 இல் இப்பள்ளி உயர்நிலைக் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக கட்டி டம் சிதிலமடைய தொடங்கியதால் பாரம்பரிய கட்டிடத்தை பயன்படுத் துவது படிப்படியாக குறையத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரி வித்தனர். சென்னை மாநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல முக்கியமான கட்டிடங்களை போன்று, பூந்தமல்லியில் உள்ள இந்த பள்ளியும் மங்களூர் ஓடு களால் வேயப்பட்ட கூரை மற்றும் மெட்ராஸ் மாடி வகை கூரையை கொண்டது. வெளிப்புறச் சுவர்க ளில் சிமெண்ட் அல்லது சுண்ணாம்பு பூச்சு இல்லாத கட்டிடமும் இது வாகும். இந்த கட்டிடத்தை புணர மைப்பதற்கான திட்ட முன்மொழி வுக்கு அரசு ஒப்புதல் கிடைத்தவு டன் இரண்டு அல்லது மூன்று மாத ங்களில், கட்டடத்தை பழைய நிலைக்கு மாற்றும் பணி தொடங் கப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.