தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோர், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 16 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 2276 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.