districts

தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் தற்காலிகப் பணி வாய்ப்பு

தஞ்சாவூர், ஆக.24-  

       தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில  ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் காலியாக உள்ள 14 வட்டார வள நபர் பணியி டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன.

      வட்டார வள நபர் தகுதிகள் விபரம்: வயது 31.07.2023 தேதி அனறு 25-45 வய துக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி யாகக் குறைந்தது ஏதாவது ஒரு இளநிலை  பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.  மகளிர் சுய உதவிக்குழு, ஊராட்சி அள விலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், பயிற்சியாளர்கள், சமூகப்  பணியாளர்கள், வாழ்வாதார திட்ட அனு பவம், முன்னாள் வட்டார வள நபர்கள்  மற்றும் பிற அரசுத்துறை பயிற்சியாளர் குறைந்தது மூன்று ஆண்டுகள் முதல்  ஐந்து ஆண்டுகள் வரை பணிபுரிந்திருத்தல் முன் அனுபவம் இருக்க வேண்டும்.  

      முன்னாள் வட்டார வள நபர்களுக்கு ஒன்றாவது முன்னுரிமையில் வழங்கப் படும். மற்ற பிற தகுதிகளுக்கான காரணி களில் மாற்றம் இல்லை. கணினி எம்.எஸ்  ஆபிஸ், ஆன்ட்ராய்டு மொபைல் அப்ளிக்கேஷன் நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.  

    தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக இருக்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்- 28.08.2023 ஆகும்.  

   விண்ணப்பத்தை, இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, எண்-223 - இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், தஞ்சா வூர்-613 010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.