தஞ்சாவூர், செப்.19 - தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிப்புத்துறை யில், ஆண்டுதோறும் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப் பெற்ற நாள் மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ஆம் நாள் பதிப்புத்துறை நூல்கள் 50 சதவீதம் சிறப்புக் கழிவு விலையில் விற்பனை செய்வது வழக்க மாகும். இந்த ஆண்டும் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்கு சிறப்புக் கழிவு விற்பனை நடைபெற வுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற விழாவில், தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் கலந்து கொண்டு, தொடங்கி வைத்துப் பேசுகையில், “இவ்வாய்ப்பினை மாணவர்களும், ஆய்வாளர்களும், தமிழ் அறிஞர்களும், பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நூல்கள் பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் கிடைக்கும்” என்று தெரிவித்தார். இவ்விழாவில் பதிவாளர் (பொ) சி.தியாகராஜன், பதிப்புத்துறை இயக்குநர்(பொ) கோ.பன்னீர்செல்வம், மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சு.முருகன், புலத்தலை வர்கள், கல்வியாளர்கள், அலுவல் நிலைப் பணியாளர் கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.