திருவாரூர், ஆக.18 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டையொட்டி 2024 கலை இலக்கிய இரவு, திருவாரூர் கிளை சார்பாக கீழ வீதி யில் சனிக்கிழமை மாலை துவங்கி விடிய விடிய நடைபெற்றது. திருவாரூர் பழைய பேருந்து நிலையத் தில் உள்ள திரு.வி.க. சிலையில் இருந்து புறப்பட்ட கலை இலக்கிய பேரணியை, திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவன பிரியா தலைமையில் ஒன்றிய பெருந்தந் வர் ஏ.தேவா துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு திருவாரூர் கிளைத் தலைவர் சு.ஜெயராமன் தலைமை வகித் தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், திரைப்படக் கலைஞருமான ரோகிணி “தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” என்ற தலைப்பிலும், திரைப்பட இயக்குநர் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் “நீர் மேல் எழுத்து” என்ற தலைப்பிலும், மாநிலத் துணை பொதுச்செயலாளர் கவி ஞர் களப்பிரன், மாநில செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் ஸ்டாலின் சர வணன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மாவட்டத் தலைவர் மு.செளந்தர ராஜன், செயலாளர் ஜீ.வெங்கடேசன், பொருளாளர் செல்வராஜ், திருவாரூர் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிளைப் பொருளாளர் நா.அசோக் குமார் நன்றி கூறினார். முன்னதாக திருவாரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தைலம்மை திரை யரங்கில் செப்.18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கான இலச்சினை (லோகோ) வெளியிடப்பட்டது. தொடர்ந்து, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் நெல்லையப்பர் மற்றும் எள்ளு பேத்தி திருவாரூரில் வசிப்பதை அறிந்து, அவர் களை மேடையில் அறிமுகப்படுத்தி கவு ரவிக்கப்பட்டனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை கட்டமைத்து வழிநடத்திய மூத்த தோழர்களை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. கவிஞர் வல்லம் தாஜ்பால், இளம் கவிஞர்கள் வரத.வசந்தராஜன், தமிழ் பிரியா ஆகியோர் கவிதை வாசித்தனர். புதுவை சப்தர் ஹஸ்மி கலைக்குழுவினர் மகாலிங்கம், பக்கிரி தாஸ், வானம்பாடி மற்றும் கங்கை கருங்கு யில் கலைக்குழுவினர், கங்கை கருங்குயில் குழுவினர் பறை இசை ஆட்டம், பழ வனக்குடிகுடி நண்பர்கள் கோலாட்டம் நடைபெற்றது. நிறைவாக புதுகை பூபாளம் கலைக் குழு சார்பாக அரசியல் நையாண்டி தர்பார் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.