புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு
தஞ்சாவூர், பிப்.6- தஞ்சாவூர் மாவட்டம் கே.கே. நகர் பகுதியில் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் மின் விநியோகம் அடிக்கடி தடை பட்டு வந்த நிலையில், சீரான மின் விநியோகம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பேராவூ ரணி சட்டமன்ற உறுப்பினர் அறி வுறுத்தலின்படி, மின் மேம் பாட்டு திட்டத்தின்கீழ், கே.கே.நகர் பகுதியில், புதிதாக 100 கிலோவாட் மின்மாற்றி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டது. இதனை செவ்வாயன்று பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் துவக்கி வைத்தார்.
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
பாபநாசம், பிப்.6 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டை அருகே காவலூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது. இதில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பழனி யப்பன் குத்து விளக்கேற்றி னார். நுகர்பொருள் வாணிபக் கழக கும்பகோணம் கோட்ட மேலாளர் இளங்கோவன் நிலையத்தை திறந்து வைத் தார். ஊராட்சி மன்றத் தலை வர் செந்தில்குமார், துணைத் தலைவர் சத்திய மூர்த்தி, செய லர் அபிஷா, கொள்முதல் நிலைய அலுவலர் கோவிந்த ராஜ், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆய்வு
அரியலூர், பிப்.6 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு வினர் ஆய்வு செய்தனர். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள், தினசரி நோயாளிகள், புற நோயாளி கள் வருகை பதிவேடு, உள் நோயாளிகள் இருப்பு, அவர் களுக்கு தேவையான படுக்கை வசதி மற்றும் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி யிடங்கள் குறித்து கேட்டறிந்த னர். மேலும், மருந்து பிரிவில் இருப்பில் உள்ள மற்றும் தேவைப்படும் மருந்துகள் குறித்து கேட்டனர். தேசிய பேரிடர் மேலாண்மை குழு அணி தலை வர் வீரகுமார் தலைமையில், தாசில்தார் கலிலூர் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மருத்துவ மனை தலைமை மருத்துவர் செந்தில்குமார் மற்றும் மருத்து வர் ராஜவன்னியன், தலைமை செவிலியர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முத்தமிழ் பாசறையின் தமிழர் திருநாள் விழா
பொன்னமராவதி, பிப்.6 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் முத்தமிழ் பாசறையின் 15 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா நடை பெற்றது. விழாவின் முதல் நாளான சனிக்கிழமை தமிழன்னை ஊர்வலம், சிலம்பாட்டம், கோலாட்டம், துடும் பாட்டம், நையாண்டி மேளம், தாரை தப்பட்டை, மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் விழா நடைபெற்றது. தொ டர்ந்து நடைபெற்ற இயல் அரங்கத்திற்கு பாசறை தலைவர் பாலமுரளி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை தமிழ் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி பங்கேற்று விருதுகள் வழங்கி கருத்துரையாற்றினார். தொடர்ந்து தமிழ்ச்செம்மல் நெ.ரா.சந்திரன் தலைமையில் விவாத அரங்கம் நடைபெற்றது. 2 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இளவட்டக்கல் தூக்குதல், உரியடித்தல், கோலம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பாசறையின் புதிய நிர்வாகிகளை பணியமர்த்தி பரிசுகள் வழங்கி, வள்ளுவம் வகுத்த வாழ்வியல் என்ற தலைப்பில் தமிழருவி மணியன் சிறப்புரையாற்றினார்.
பணிப் பதிவேட்டை பராமரிக்க கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, பிப்.6 - ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத் தின் திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கல்லுப்பட்டி யில் பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க ஒன்றி யத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் தியாகராஜன் துவக்க உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் அழகர் சாமி வாழ்த்துரை வழங்கினார். சங்க மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். பணிப் பதிவேட்டை பராமரிக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ராமசாமி, செயலாளராக துரைப்பாண்டி, பொரு ளாளராக கருமன் உள்பட 30 பேர் கொண்ட வட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
அரியலூர், பிப்.6 - அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி, தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவ லர்கள், ஜெயங்கொண்டம் பகுதியில் அரசால் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினர். அப்போது ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் ஜெயிலா புதீன் என்பவர் மளிகை கடையில் அரசால் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் அடங்கிய 17 மூட்டைகளும், பிளாஸ் டிக் கேரி பை மூன்று மூட்டைகளும் ஒருமுறை பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக் கப் ஒரு மூட்டையும், பேப்பர் கப் ஒரு மூட்டை என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உணவு பாதுகாப்பு அதிகாரிகள், விற்பனைக்கு தடைவிதித்து இக்கடையை பூட்டி சாவியை எடுத்துச் சென்றனர்.