districts

img

17 கூட்டுறவு சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவிகள் வழங்கல்

திருவாரூர், பிப்.19 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  கூட்டரங்கில் 17 பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவி  மற்றும் பால் கேன்களை காரைக்கால் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங் கினார். திருவாரூர் மாவட்டத்தில் நலிவுற்றிருந்த  பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு உதவி கள் செய்து அதன் மூலம் சங்கங்களை மேம் படுத்தும் நோக்கில் இந்த சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவி மற்றும் பால் கேன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு  ரூ.9.8 லட்சம். நிகழ்ச்சியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக பொது மேலாளர் மாறன், பால் கூட்டுறவு சங்கங்களின் துணைப்  பதிவாளர் நாகராஜ், ஆவின் மேலாளர் சர வணக்குமார், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக சமூக பொறுப்பு திட்ட அலு வலர் விஜய்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.