மயிலாடுதுறை, அக்.13 - மயிலாடுதுறை காமராஜர் சாலை யில் மக்களின் பங்களிப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு புதிய அலுவலகம் கட்டப் பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை அக்.21 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் மாவட்டக் குழு புதிய அலு வலகத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு திறப்பு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், மயிலாடுதுறை நகர செயலாளர் டி.துரைக்கண்ணு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.ஆர்.விஜய், ஏ.அறிவழகன் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.