districts

img

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் தங்கம் வென்ற கரூர் மாணவர்

கரூர், ஜூலை 27-  

     மாநில அளவிலான சிலம்பப் போட்டி யில்  கரூர் மாணவர் தங்கம் வென்றுள் ளார்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், திரு வெறும்பூரில் ஜூலை 23-ஆம் தேதி சோழாஸ் டிபன்ஸ் அகாதெமி சார்பில்  மாநில அள விலான முதலாவது சிலம்பம் தொடும் முறை சண்டை போட்டி நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிலம்ப மாண வர்கள் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு  கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியைத் தொடங்கி வைத்தார்.

    மாணவர்களின் வயது மற்றும் எடை யை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மினி  சப் ஜூனியர் கேட்டகிரி 20 - 30 கிலோ எடைப்  பிரிவில் கரூர் பாரதம் சிலம்பம் அகாதெமி  சார்பில் புகளூர் காகித ஆலையில் தொழி லாளியாக பணிபுரியும் ஆனந்தஐயப்பன் மகன் ஆ.குகன் கார்த்திக்கேஸ்வரன் கலந்து கொண்டு நான்கு சுற்றுகளில் வெற்றி  பெற்று மாநில அளவில் முதல் இடம் பிடித்து  சாதனை படைத்துள்ளார். இவருக்கு சான்றி தழ், தங்கப் பதக்கம் மற்றும் ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

   வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா கரூரில் நடைபெற்றது. இந்  நிகழ்வில் பாரதம் சிலம்பம் அகாதெமியின் ஆசான்கள்  கிருஷ்ணராஜ்,  சௌந்தர ராஜன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பி னர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டினர்.