districts

img

உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் வன விலங்குகள்?

தஞ்சாவூர், மார்ச் 28- பேராவூரணி அருகே பிடிபட்ட புள்ளி மான் வனத்துறையினர் வசம் ஒப்படைக் கப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட பழைய பேரா வூரணி மேலத்தெரு பகுதியில், வியாழக் கிழமை காலை அப்பகுதி இளைஞர் கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்த னர். அப்போது திடீரென நாய்கள் குரைக் கும் சத்தம் கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து புள்ளிமான் ஒன்று அதிவேகமாக பாய்ந்து ஓடி வந் துள்ளது. இதையடுத்து இளைஞர்கள் நாய்களை துரத்திவிட்டு, மானை விரட்டிச் சென்று பிடித்து பத்திரமாக அங்கிருந்த ஒரு வீட்டில் கட்டி வைத்த னர். மேலும் தண்ணீர், புல் ஆகிய வற்றை மானுக்கு வழங்கினர். பின்பு, இதுகுறித்து வனத்துறை, காவல்துறை, வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து, அங்கு கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் சர்மா,  காவல்துறை தலைமைக் காவலர் அருள் செல்வன், வருவாய் கிராம உதவியா ளர்கள் வந்து பார்வையிட்டனர். பின்னர், பட்டுக்கோட்டை வனச்சரகர் சந்திரசேகரன் உத்தரவின்படி, வனத் துறையினர் மானை பத்திரமாக மீட்டுச்  சென்றனர்.  இந்த மானுக்கு லேசான காயங்கள்  இருப்பதால், கால்நடை மருத்துவர்கள் சிகிச்சைக்குப் பிறகு, காப்புக்காட்டில் பத்திரமாக விடுவிக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.  பிடிபட்ட புள்ளிமான் சுமார் 20 கிலோ  எடையுள்ள, 3 வயதுடைய பெண் மானாக இருக்கலாம் எனக் கூறப்படு கிறது. இந்தப் பகுதியில் வனப்பகுதி இல்லாத நிலையில் புள்ளிமான் எப்படி  வந்தது எனத் தெரியவில்லை. இங்கி ருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள, ஆலங்குடி - கொத்தமங்கலம் வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  கடந்த 2 தினங்களுக்கு முன்பு சுமார்  15 கி.மீ தூரத்தில் உள்ள கீரமங்கலம் பகுதியில் அடையாளம் தெரியாத வாக னம் மோதி, மான் ஒன்று சாலையில் இறந்து கிடந்தது. அதனை வனத்துறை யினர் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்து  அடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.  வனத்துறை நடவடிக்கை எடுக்குமா...?  புதுக்கோட்டை மாவட்ட வனப் பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த பகுதியில் காப்புக்காடு கள் இருந்தன. மேலும் வனவிலங்கு கள் உணவு, தண்ணீர் தேடி வெளியே வராமல் இருக்க சிறு குட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தன.  இந்நிலையில் தற்போது காப்புக் காடுகள் அழிக்கப்பட்டு, தைல மரம் மற்றும் முந்திரிக் காடுகள் மட்டுமே இருப்பதால் உணவு, தண்ணீர் தேடி மான்கள் சாலைப் பகுதிக்கு வந்து, நாய்களால் கடிபட்டும், விபத்தில் சிக்கி யும் உயிரிழக்கும் நிலை உள்ளது.  எனவே, காப்புக்காடு பகுதியில் பல்வேறு வகையான மரங்களை வளர்க்கவும், தண்ணீர் குட்டைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

;