சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள்
தஞ்சாவூர், அக்.24 - தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “டாம்கோ மற்றும் டாப்செட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் அக்.25 அன்று தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியிலும், அக்.28 அன்று கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியிலும், அக்.29 அன்று பட்டுக்கோட்டை கூட்டுறவு நகர வங்கியிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. மேற்படி, கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடை யோர் தகுதியானவர்கள். எனவே, சிறப்பு முகாம்களில் பங்கேற்று மனுக்களுடன் சாதிச் சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம்/திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக் கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது/செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இளைஞர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தஞ்சாவூர், அக்.23 - தஞ்சாவூரில் மோட்டார் சைக்கிள் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மேல அலங்கம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தர்ஷன் (32). இவரது வீட்டு வாசலில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வர்ணம் பூசும் தொழிலாளி கே.குணசேக ரன் (42) தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வந்தார். இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே தகராறு இருந்தது. இதேபோல, மார்ச் 9 அன்று இரவு ஏற்பட்ட தகராறில் தர்ஷனை குணசேகரன் கத்தியால் குத்தினார். இதனால் பலத்த காயமடைந்த தர்ஷன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு மார்ச் 10 அன்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து குணசேகரனைக் கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி கே. பூரண ஜெய ஆனந்த் விசாரித்து குணசேகரனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பு அளித்தார்.
பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உபயோகப் பொருட்கள் வழங்கல்
தஞ்சாவூர், அக்.24 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காமராஜர் அரசு மருத்துவமனைக்கு தனியார் நிதி நிறுவனம் சார்பில், ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டில், பீரோ, பிளாஸ்டிக் சேர் ஆகியவை வழங்கப்பட்டன. கிரெடிட் அக்சஸ் கிராமின் லிமிடெட் நிதி நிறுவனம் சார்பில், பேராவூரணி காமராஜர் அரசு மருத்துவமனை க்கு நோயாளிகள் பயன்படும் வகையில் ஸ்டீல் பீரோ, ஸ்டீல் ராக், ஸ்டீல் பெஞ்ச், பிளாஸ்டிக் மற்றும் வயர் சேர் ஆகியவற்றை கிரெடிட் அக்சஸ் கிராமின் லிமிடெட் மற்றும் கிரெடிட் அக்சஸ் இந்தியா பவுண்டேஷன் நிறு வனம் சார்பில், அதன் கோட்ட மேலாளர் முருகன், வட்டார மேலாளர் முரளி ஜோதிமணி மற்றும் ஒருங்கிணைப்பா ளர்கள் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காமேஸ்வரி தேவி மற்றும் மருத்துவர்கள் பாலகுமார், சினேகா பிரியதர்ஷினி ஆகியோரிடம் வழங்கினர். இந்நிகழ்வில், நிறுவன பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தியாகி நாராயணசாமி பள்ளியில் கற்றல் திறன் ஆய்வு
மயிலாடுதுறை, அக்.23- மயிலாடுதுறையில் தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சி யர் ஏ.பி.மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடி கற்றல் திறனை ஆய்வு செய்தார். மாணவர்கள் நல்ல முறையில் கல்வியை கற்க வேண்டும், தேவை யில்லாத போதை பழக்கத்தில் ஈடுபடாமல் கல்வி ஒன்றே இன்றியமையாதது என்பதை உணர்ந்து கற்க வேண்டும், பொதுத்தேர்வுக்கு வழங்கப் பட்டுள்ள வினா-விடை கையேடுகளை பயன் படுத்தி முழுமையாக தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரி வித்தார்.அதனைத் தொடர்ந்து, பள்ளி வகுப்ப றையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பார்வையிட்டு கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
விபத்துக்குள்ளான காரில் ஏர்பேக் பலூன் செயல்படாததால் பாதிப்பு இளைஞருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
தஞ்சாவூர், அக்.24 - விபத்துக்குள்ளான காரில் ஏர்பேக் பலூன் செயல்படாததால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு கார் நிறுவனத்துக்கு, தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள பள்ளத்தூரைச் சேர்ந்தவர் நீதிமோகன் மகன் தியானேஸ்வரன் (29). இவர், சென்னையிலுள்ள நிறுவ னத்தில் 2018 ஆம் ஆண்டில் புதிதாக கார் வாங்கினார். அப்போது முதல், அடிக்கடி பழுதாகி வந்த இந்த காரை தியானேஸ்வ ரனின் சகோதரர் தீபக்சன் 2020, நவம்பர் 19 ஆம் தேதி கோவைக்கு ஓட்டிச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். கரூர் - திருப்பூர் சாலையில் முடக்குத்தாலை யில் விபத்துக்குள்ளான இந்த கார் 85 சதவீதம் சேதமடைந்தது. மேலும், உயிர் காக்கும் ஏர் பேக் பலூன் சாதனம் சரியாக வேலை செய்யாததால், தீபக்சன்னுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அதிக அளவில் மருத்துவ செலவு ஏற்பட்டு தொடர்ந்து, சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கார் நிறுவனத்திடம் முறையிட்டபோது, அதை அந்நிறு வனத்தினர் நிறைவேற்ற முன்வரவில்லை. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் தியானேஸ்வரன் புகார் செய்தார். இதன் பேரில் ஆணையத் தலைவர் த. சேகர், உறுப்பினர் கே. வேலுமணி ஆகி யோர் விசாரித்து, ஏர்பேக் பலூன் சரியாக வேலை செய்யாதது வாகனத்தின் உற்பத்தி கோளாறு என்றும், அதனால் ஏற்பட்ட ஒட்டுமொத்த பாதிப்புக்கு உள்ளான தியானேஸ்வரனுக்கு கார் நிறுவனம் ரூ. 10 லட்சம் இழப்பீடும், 2021 மார்ச் 9 ஆம் தேதிமுதல் தொகையைத் திரும்ப வழங்கும் தேதி வரை 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்து புதன்கிழமை உத்தரவிட்டனர்.
தரங்கம்பாடி பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மயிலாடுதுறை, அக்.24- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட பகுதிக ளில் தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களை தேடி உங்கள் ஊர்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். தரங்கம்பாடி பேரூராட்சி பொறையாரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தும் வகை யில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், செயல் அலுவலர் கமலகண்ணன்,சுகாதார ஆய்வாளர் இளங்கோ மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து, இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் உத்திரங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் முத லமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு தயார் செய்யப்பட்டுள்ள உண வின் தரத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் உணவுப் பொருட்க ளின் இருப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் நா.உமாமகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, சீர்காழி வருவாய் கோட்டாட் சியர் உ.அர்ச்சனா, செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, மீனா, வட்டாட்சியர் மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.