நாமக்கல், செப். 23 - நாமக்கல் மாவட்டம் ஆலமேடு ஊராட்சி தொடக்கப்பள்ளியில், பாலியல் சீண்டல் புகாருக்குள் ளான தலைமை ஆசிரியரை போலீ சார் பாதுகாப்புடன் அழைத்து சென் றதை கண்ட பெற்றோர்கள் கொந்த ளித்தால் பரபரப்பு எற்ப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அடுத்த அலமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. அப்பள்ளியில் அதே பகு தியை சேர்ந்த மாணவர் மாணவி கள் 200க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலை யில் அப்பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரி யர்கள் இருவர் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கடந்த சனியன்று அலமேடு பகுதியில் அரசு விழாவில் பங்கேற்க வந்தி ருந்த வனத்துறை அமைச்சர் மதி வேந்தனிடம் பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் திங்களன்று மாவட்ட கல்வி அதி காரி ரவி செல்வம், வட்டார கல்வி அதிகாரி காமாட்சி, குமாரபாளை யம் தாசில்தார் சிவக்குமார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் ஆகியோர் பள்ளியில் விசாரணையை தொடங்கினர். விசாரணையின் முழு அறிக் கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரிய ரிடம் வழங்கப்பட்டு, அதன் மூலம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதி காரிகள் தெரிவித்தனர். ஆனால், பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட ஆசி ரியர்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை என்றும் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மாலை பள்ளி முடிந்தவுடன் பொறுப்பு தலைமை ஆசிரியரை போலீசார் பாதுகாப்பு டன் கூட்டிச்சென்றதை பார்த்த மாணவிகளின் பெற்றோர்கள் மற் றும் பொதுமக்கள் கொந்தளித்து அங்கு பாதுகாப்பணியில் ஈடுபட்டி ருந்த போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில், பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. குற்றம் சுமத்தப்பட்டவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போலீசாரி டம் வாக்குவாதம் ஈடுபட்டனர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடு பட்ட பொதுமக்களிடம் புகார் தொடர்பாக தொடர் விசாரணை நடக்க உள்ளதாகவும் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சமரசம் செய்தனர். இதைதொடர்ந்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.