தஞ்சாவூர்/புதுக்கோட்டை, டிச.10 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர், சார்பு நீதிபதி, தலைமை யில் சனிக்கிழமை பட்டுக்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி டி.வி.மணி, பட்டுக்கோட்டை வட்ட சட்டப்பணி கள் குழு தலைவர், சார்பு நீதிபதி கே.பாலகிருஷ்ணன், மாவட்ட உரி மையியல் நீதிபதி எம்.இரவிச்சந்தி ரன், நீதித்துறை நடுவர் கே.சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர். மூன்று அமர்வாக பிரிக்கப்பட்டு 328 வழக்குகள் எடுத்துக் கொள்ளப் பட்டன. இதில், 234 வழக்குகளுக்கு ரூ.1,54,33,541-க்கு தீர்வு காணப்பட்டது. மேலும், நீண்ட நாட்க ளாக நிலுவையில் இருந்து வந்த வழக்குகள் சமரசமாகப் பேசி முடிக் கப்பட்டன. இதில் வழக்கறிஞர்கள், வழக்காடிகள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டையில் ரூ.6.63 கோடிக்கு தீர்வு புதுக்கோட்டை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் 4 ஆவது தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. நகரில் 6 அமர்வுகளும், புறநகரப் பகுதி களில் 3 அமர்வுகள் என மொத்தம் 9 அமர்வுகள் நடைபெற்றன. மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான நீதிபதி கே.பூர்ண ஜெய ஆனந்த் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்கில் லெட்சுமி என்பவருக்கும், நியூ இந்தியா ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின ருக்கும் நடைபெற்று வந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, சமரசத் தீர்வு காணப்பட்டது. காப்பீட்டுக் கழகத்தினர் ரூ. 53 லட்சம் இழப்பீட்டுத் தொகையை லெட்சுமிக்கு வழங்கினர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 4964 வழக்குகள் எடுத்துக் கொள்ளப் பட்டு, 3036 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6.63 கோடி. இதில் நியூ இந்தியா காப்பீட்டுக் கழகத்தின் மூலம் தீர்வு காணப்பட்ட மதிப்பு மட்டும் ரூ.2.29 கோடி. மக்கள் நீதி மன்றத்துக்கான ஏற்பாடுகளை சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலர் கே.ராஜேந்திர கண்ணன் ஒருங்கி ணைத்தார்.