இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தஞ்சை மாவட்ட ரத்ததான கழகத்தின் சேவையைப் பாராட்டி, சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பாக கேடயம் வழங்கப்பட்டது. இதில், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் உ.சரவணன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் வி.அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.