கும்பகோணம், அக்.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகர 24 ஆவது மாநாடு தாராசுரத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநகரக் குழு உறுப்பினர்கள் பார்த்த சாரதி, பக்கிரிசாமி, ஜோதி ஆகியோர் தலைமை வகித்த னர். முன்னதாக பழ.அன்பு மணி செங்கொடியை ஏற்றினார். மாமன்ற உறுப்பி னர் ஆர். செல்வம் வரவேற் றார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன் பேசினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் நிறைவுரை ஆற்றினார். கட்சியின் மாநகரச் செய லாளராக கா.செந்தில்குமார் உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் கொண்ட மாநகரக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநகரச் செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறி னார். கும்பகோணம் மாநக ரத்துக்குள் குடிமனை இல்லாத அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும். கும்பகோணம் மாநகரச் சாலைகளை செப்பனிட்டு சீரமைக்க வேண்டும். கும்பகோணம் மாநகராட்சி துப்புரவுப் பணி யாளர்கள் ஒப்பந்த முறை யில் பணி அமர்த்தப்பட்டி ருப்பதை ரத்து செய்து, அவர்களை பணி நிரந்தரம் செய்து குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26000வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.