districts

img

மூத்த தோழர் இரா.தாமோதரன் படத்திறப்பு தமுஎகச மாநில தலைவர்கள் பங்கேற்பு

மன்னார்குடி, மார்ச் 7 - பிப்ரவரி 10 அன்று காலமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவரும் மாநிலக் குழு உறுப்பினருமான தோழர் இரா.தாமோ தரன் படத்திறப்பு மன்னார்குடியில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கிளை தலை வர் கா.வீ.பாஸ்கரன் தலைமை வகித்தார்.  தோழர் தாமோதரன் படத்தை தமுஎகச தலைவரும், தீக்கதிர் நாளிதழ் ஆசிரி யருமான கவிஞர் மதுக்கூர் இரா மலிங்கம்  திறந்து வைத்தார்.  பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்தின் மாநில பொதுச் செயலா ளர் இரா.காமராஜ், தமுஎகச தஞ்சை  மாவட்ட தலைவர் கவிஞர் சா.ஜீவ பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் மரு. இலரா பாரதிச்செல்வன், விசிக மாநில  துணைச் செயலாளர் மன்னை இரா.இரமணி, காங்கிரஸ் நகர தலைவர் ஆர்.கனகவேல், தமுஎகச மாவட்ட செயலாளர் ஆர்.பகவான்ராஜ், மாவட்ட துணைத் தலைவர் கு.வேதரெத்தினம், மாவட்ட பொருளாளர் கவிஞர் மா. சண்முகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் பி.கந்தசாமி, கே. தமிழ்மணி, சிஐடியு இணைப்பு சங்க  தலைவர்கள், அனைத்துத் துறை ஓய்வூ தியர் சங்க மாவட்ட தலைவர் டி.சீனிவா சன் மற்றும் திருவாரூர் மாவட்ட கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  கவிஞர்கள் சரசுவதி தாயுமானவன், ஆருர் பொன்.மகாலிங்கம், கோவி. அசோகன், சி.செல்லதுரை மணி வண்ணன், பாரதிபூமிநாதன் பங்கேற்ற கவியரங்கம் நடைபெற்றது. தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், தமு எகச மாநில பொதுச் செயலாளர் ஆத வன் தீட்சண்யா ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.  தோழர் இரா.தாமோதரனின் விருப்பப்படி, அவரது நூல்களின் ஒரு பகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நகரச் செயலாளரிடம் இரா.தாமோ தரனின் மனைவி ராதாவும்,  மற்றொரு பகுதியை மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி வாசகர் வட்டத்திற்கும் நகரத் துளிர் இல்லங்களுக்கும் மகள்கள் சத்ய தீபாவும், நித்யதாராவும் வழங்கினர். கிளை பொருளாளர் சீ.சுந்தர ராஜ கோபாலன் நன்றி கூறினார்.

;