districts

img

மாநில விளையாட்டுப் போட்டிக்குத் மாற்றுத்திறனாளி மாணவர் தேர்வு

புதுக்கோட்டை,  டிச.4 - புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அரசுப் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.  புதுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட‌ கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய தட்டாமனைப்பட்டி நடுநிலைப் பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவர் கே.மருதவேல் குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று, மாநில அளவில் நடைபெற இருக்கும் போட்டிக்குத் தேர்வாகி உள்ளார். மேலும் நீளம் தாண்டுதல், 100 மீ ஓட்டப்பந்தயம் போட்டிகளில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.