தஞ்சாவூர், ஏப்.1- தஞ்சாவூர் பகுதியில் வெள்ளரிப் பிஞ்சு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலை யில், பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரு கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் மக்கள் அவதியடைகின்றனர். இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இள நீர், பழரசம், தர்ப்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு போன்ற உட லுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை வாங்கிச் சாப்பிட்டு வருகின்றனர். இவற்றில் வெள்ளரிப் பிஞ்சு விற்பனை தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் தள்ளுவண்டியில் வைத்து வெள்ளரிப் பிஞ்சுகள் விற்பனை செய்யப்படுகின்றது. உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரியை, பொதுமக்கள் ஆர்வ முடன் வாங்கிச் சாப்பிடுவதால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஒரு கட்டு வெள்ளரிப் பிஞ்சு ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய அளவிலான தனி வெள்ளரிப்பிஞ்சு ரூ.15 வரை விற்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் விளையும் வெள்ளரிப் பிஞ்சுகள் அறுவடை செய்யப்பட்டு தஞ்சைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.