கரூர்,டிச.16- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் பரணி பார்க் பள்ளி கிளை மாநாடு மற்றும் பாராட்டு விழா பரணி பார்க் பள்ளியில் நடை பெற்றது. மாநாட்டிற்கு கிளைத் தலைவர் முனை வர் சி.ராமசுப்ரமணியன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் எஸ்.சுதாதேவி வேலை யறிக்கை சமர்ப்பித்தார். மதிப்புமிகு முதல்வர் விருதுபெற்ற பரணி பார்க் பள்ளியின் முதன்மை முதல்வரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கிளைத் தலைவருமான முனைவர் சி.ராமசுப்ர மணியன் அவர்களை மாவட்டத் தலை வர் தீபம் சங்கர், மாவட்டச் செயலாளர் ஐ. ஜான்பாட்சா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்ரமணி, மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். கிளையின் புதிய தலைவராக முனை வர் சி. ராமசுப்பிரமணியன், செயலாளராக சுதாதேவி பொருளாளராக சேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 2023 ஆம் ஆண்டில் 1700 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.