districts

img

மந்த நிலையில் மழை நீர் வடிகால் பணிகள் அரசு மருத்துவமனை அருகே சுகாதாரச் சீர்கேடு..!

கோவை, பிப்.8- கோவை ரயில் நிலையம் மற் றும் திருச்சி சாலையை இணைக் கும் லங்கா கார்னர் சுரங்கப்பாதை  தாழ்வான பகுதியில் இருப்பதால்,  மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் மழை நீரானது,  லங்கா கார்னர் -  ரயில்நிலையம் சாலை கால்வாய் மற்றும் கோவை  அரசு மருத்துவமனை வழியாக திருச்சி சாலையில் செல்லும் கால் வாய்களில் எப்போதும் அடைப்பு ஏற்பட்டு மோசமான நிலையில் காணப்பட்டு வந்தது.  குறிப்பாக மழைக்காலங்க ளில் லங்கா கார்னர் பகுதியில் மழை நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்படுகி றது. கோவை அரசு மருத்துவ மனை அருகே செல்லும் கழிவுநீர்  வாய்க்காலிலும் கழிவு நீர் வெளி யேறி, கோவை அரசு மருத்துவ மனை வளாகம் முழுவதும் கழிவு நீரால் சூழப்பட்டு வந்தது.  இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் கட்டும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து, துவங்கி யது. அதன்படி லங்கா கார்னர் சுரங் கப் பாதையில் இருந்து அரசு மருத்துவமனை வழியாக வாலாங் குளம் வரை சுமார் 250 மீட்டர் தொலைவிற்கு கழிவுநீர் கால்வாய்  அகலப்படுத்தப்பட்டு, கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. முதல் கட்டமாக லங்கா கார்னர் சாலையை ஒட்டி கழிவு நீர் செல்ல ஏதுவாக தூர் வாரப்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனை ஒட்டி செல்லும் கால்வாய் பொக்லின் மூலம் அக லப்படுத்தும் பணிகள் நடை பெற்று வந்தது. இந்நிலையில், தற் போது அந்த கட்டுமான பணிகள் தொடராமல் இருப்பதால் அரசு  மருத்துவமனை நுழைவு வாயிலை ஒட்டி செல்லும் கழிவுநீர்  கால்வாயில் நீர் தேங்கி துர்நாற் றம் வீசி வருகிறது. தினமும் ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் வந்து  செல்லும் பகுதியாக உள்ள இப் பகுதி சுகாதார சீர்கேடுடன் காணப் படுகிறது. அதே போல் கோவை அரசு  மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுகளும் நுழைவு வாயிலில் உள்ள சாக் கடையில் தேங்கி நிற்பதால் மோச மான நிலையில் காணப்படுகி றது. அண்மையில் “சூப்பர் ஸ்பெஷாலிட்டி” என்ற புதிய கட்டி டம் திறக்கப்பட்டு,  உள்கட்ட மைப்பு வசதிகள் மேம்படுத்தப் பட்ட நிலையில், மருத்துவ மனையின் நுழைவாயில் மிக  மோசமான நிலையில் காணப்படு வது அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து அப்பகுதி வாடகை வாகன ஓட்டிகள் கூறுகை யில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவை அரசு மருத்துவ மனை அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயால் எப்போதும் பிரச் சனை இருந்து வருகிறது. அண் மையில் அந்த சாக்கடை கால் வாய் அகலப்படுத்தி கான்கிரீட்  சுவருடன் மூடி சாக்கடை நீர் செல் லும் வகையில் பணிகள் நடை பெறுவதாக அறிவித்தனர். ஆனால் அப்பணிகள்  பாதியி லேயே நிற்பதால், எங்களுக்கு கூடு தல் சுமையாக மாறிவிட்டது. மருத்துவமனையில் இருந்து  வீட்டிற்கு செல்லும் நோயாளி களை அழைத்துச் செல்ல காத்தி ருக்கும் எங்களுக்கே நோய் ஏற் படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  அதேபோல் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவு  நீரை கூட முறையாக வெளி யேற்ற ஏற்பாடுகள் செய்ய வில்லை. மதில் சுவரை துழை யிட்டு அதன்மூலம் கழிவுநீர் வெளி யேறி வருகிறது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத் துள்ளனர்.      - கவி