districts

img

அரசு உரிமைகள் திட்டத்தில் ஆர்.வி.டிரஸ்ட் நிறுவனம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் புதனன்று தமிழ்நாடு அரசு உரிமைகள் திட்டத்தில் ஆர்.வி.டிரஸ்ட் நிறுவனம் மூலமாக பணியாற்றும் கிராம அளவிலான களப்பணியாளர்களுக்கு அவர்களது பணியினை எளிதாக்கிடும் வகையில் மொபைல் செயலி கொண்ட டேப்லெட்டினை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.ரவிச்சந்திரன், உதவி செயல்படுத்தும் அலுவலர் உரிமைகள் திட்டம் ம.ரமேஷ், கிரேசி சகாயராணி, சமூக பணி உரிமைகள் திட்டம் ராமச்சந்திரன், இயக்குநர் ஆர்.வி.டிரஸ்ட் மற்றும் ரூபன் தேவமணி, மைய மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.