தூத்துக்குடி , ஜூன் 12
தூத்துக்குடியில் விதிகளை மீறி அதிக மான மாணவர்களை ஆட்டோவில் ஏற்றிச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் கோடை விடு முறைக்கு பின்னர் பள்ளிகள் திங்களன்று திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வட்டாரப்போக்குவரத்து அலுவலக வளாகத்தில் வைத்து திங்க ளன்று காலை 11.00 மணியளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோ ரிக்சா ஓட்டுநர்களுக்கான அறிவுரை கூட்டம் வட்டாரப்போக்குவரத்து அலுவலர் தலைமை யில் எஸ்.விநாயகம் நடைபெற்றது.
அப்போது “அனுமதிக்ப்பட்ட எண்ணிக் கையை விட அதிகமான பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்ல கூடாது எனவும் வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களை யும் (பதிவுச்சான்று, காப்பு சான்று, ஒட்டு நர் உரிமம், அனுமதிச்சீட்டு, புகைச்சான்று) வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத் தப்பட்டது. தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.விநாயகம் தெரிவித்துள்ளார்.