districts

img

விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலைவிழா: உற்சாகமாக துவங்கியது

வேலூர், பிப். 29- வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் ரிவேரா 2024 எனும் கலைத் திருவிழா வியாழனன்று (பிப்.29)  தொடங்கியது. மாணவர் ஒருங்கிணைப்பாளர் கமலேஷ்  வரவேற்று பேசினார். விஐடி வேந்தர் விசுவ நாதன் தலைமை தாங்கி மாண வர்களை உற்சாகப்படுத்தி சிறப்புரை யாற்றுகையில், மாணவர்களின் கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்,  ஒன்றிய, மாநில அரசுகள் விளையாட்டுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். கிரிக்கெட் விளையாட்டு வீரர் சிவம் துபே சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவ நாதன், ஜி.வி.செல்வம் உள்பட விஐடி பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக வியாழனன்று காலை மாரத்தான் போட்டியை விஐடி வேந்தர் விசுவநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விஐடி-யில் தொடங்கிய மாரத்தான் போட்டி சித்தூர் பஸ் நிலையம், ஓடை பிள்ளையார் கோவில், சில்க் மில் பஸ் நிலையத்திற்கு சென்ற பின்னர் மீண்டும் விஐடி பல்கலைக்கழகத்தை அடைந்தது. இந்த போட்டியில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.