பெரம்பலூர், டிச.23 - பெரம்பலூரில் சிறப்பு பொரு ளாதார மண்டல இடத்தை வணிக நோக்கில் பயன்படுத்தும் அபாயம் உள்ளது என சட்டமன்ற பேரவை உறுதிமொழிக் குழு எச்சரித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழுவின் தலை வரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பி னருமான தி.வேல்முருகன் தலைமை யில், மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் முன்னிலையில், குழுவின் உறுப்பி னர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வெள்ளியன்று விரிவாக ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் செய்தியா ளர்களிடம் தெரிவிக்கையில், “வேப்பந்தட்டை மிகவும் பிற்படுத்தப் பட்ட அரசு கலைக் கல்லூரி மாணவர் களுக்கு ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் விடுதி கட்டு மானப் பணிகள் 95 சதவீதம் முடிவுற்று விரைவில் மாணவர்கள் தங்குவதற் கான ஏற்பாடுகள் நடக்கிறது. எறையூர் சர்க்கரை ஆலையில் உள்ள அனைத்து இயந்திரங்களும் பழுதடைந்து, ஆலை இனி இயங் காது என்ற அபாயம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயி களுக்கு ஏற்பட்டிருந்தது. இச்சூழ லில் தமிழக அரசு அதற்காக இது வரை ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தற்போது 4 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவைத் திறன் கொண்ட ஒரு ஆலையாக மாற்றியுள்ளது.
மேலும், புதிய நவீன கருவிகள் பொருத் தப்பட்டு அந்த ஆலை தற்போது நல்ல முறையில் இயங்கி வருகிறது. 243 ஏக்கரில் சிப்காட் வளாகத்தில் கோத்தாரி காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் காலணிகள் தயாரிக்கும் பணி ஆய்வு செய்யப் பட்டது. இந்த தொழிற்சாலையில் உள்ளூர் நபர்களுக்கு பணி வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகத் திற்கு குழு பரிந்துரைத்துள்ளது. பெரம்பலூர் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு தனி நுழைவாயில் அமைக்க வேண்டும் எனவும் அதற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும் எனவும் குழு பரிந்துரைத் துள்ளது. பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்ற போது, மருத்துவமனைக்கு தேவையான சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்று சொல்லக் கூடிய அளவிற்கு மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும் எனவும், பல்வேறு இதர பணியாளர் இடங்களை நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை வைக் கப்பட்டுள்ளது. அதன் அடிப்படை யில் இந்த கோரிக்கைகளை இக்குழு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய் துள்ளது. 2006 முதல் நிறைவு பெறாமல் உள்ள, தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தம் செய்யப்படக்கூடிய தொழில்சார்ந்த பொருளாதார மண்டலம் என்ற திட்டத்திற்கு எடுக்கப்பட்ட நிலங்கள் எதற்கும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. 10 முறை கூட்டம் நடத்தியும் அந்த நிறு வனம் பொருளாதார மண்டலத்தை கொண்டு வரவில்லை. எதிர்காலத்தில் அந்த நிலத்தை வணிக நோக்கத்தில் பயன்படுத்தக் கூடிய அபாயம் உள்ளதால், நில உச்சவரம்பு சட்டத்தை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர் அந்த நிலத்தை மீண்டும் அரசுக்கு சொந்தமாக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக வருவாய்த்துறை செய லர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணை யருக்கும் நிலத்தை கையகப்படுத்த இக்குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாட்டில் இனி புதிய மருத்து வக் கல்லூரி வரப் பெற்றால், அது பெரம்பலூர் மாவட்டத்திற்குத்தான் முதலில் வர வேண்டும் என்று இக்குழு பரிந்துரைக்கிறது” என்றனர்.