அரியலூர், செப்.15 - பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரிய லூர் வருவாய் மாவட்ட அளவில் 2 நாள்கள் நடைபெறும் குடியரசு தின தடகளப் போட்டி களை அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறுவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். 14, 17 மற்றும் 19 வயது என்ற அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே கீழ்க்கண்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 100 மீ, 200 மீ, 400 மீ, 80 மீ, தடை தாண்டுதல் ஓட்டம், 100 மீ தடை தாண்டுதல் ஓட்டம், 110 மீ தடை தாண்டுதல் ஓட்டம், 800 மீ, 1500 மீ, 3000 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டி கள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெயா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ் ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளை ஞர் நலன் அலுவலர் லெனின், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.