பாபநாசம், ஜூலை 31- பாபநாசம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் 40 ஆம் ஆண்டு பேரவை கூட்டம், ஆண்டு விழா நடந்தது.சங்கத்தின் தலைவர் புலவர் தங்கராசன் தலைமை வகித்தார். முன்னதாக துணைத் தலைவர் ஜீவரத்தினம் வரவேற்றார். மாவட்டச் செயலர் துரைசாமி ஆண்டு அறிக்கையும் பொருளாளர் தயாநிதி வரவு செலவு கணக்கையும் வாசித்தனர். இதில் மாநில மைய துணைத் தலைவர் திருமேனி நாதன், மாநில மைய துணைத் தலைவர் பக்கிரிசாமி பேசினர். டாக்டர் கருணாநிதி, வெங்கட் ராஜீலு, பன்னீர் செல்வம், சுப்புராமன், வஜ்ரவேலு, பாலாஜி உட்பட வாழ்த்தினர். துணைச் செயலர் அமிர்தராஜ் நன்றி கூறினார்.