திருச்சிராப்பள்ளி, டிச.5 - சிஐடியு தரைக்கடை வியாபாரி கள் சங்க திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சிஐடியு மாவட்ட அலுவலகத் தில் செவ்வாயன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலக் குழு முடிவுகள் குறித்து தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் செல்வி, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கரா ஜன் ஆகியோர் பேசினர். திருச்சி மாநகரப் பகுதிகளில் 20 ஆண்டுகளாக தரைக்கடை நடத்தி வரு பவர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது. குறிப்பாக சத்திரம் பேருந்து நிலையம், திருச்சி அரசு மருத்துவமனை, ஏர்போர்ட் போன்ற பகுதிகளில் கடை நடத்தக் கூடாது என்று விரட்டுகிறார்கள். இப்பகுதி களில் வியாபாரம் செய்யும் அனை வரும் மாநகராட்சியில் அடையாள அட்டை பெற்றுள்ளார்கள். அதே நேரத்தில் புதிய நபர்களிடம், புதிய இடங்களுக்கு மாமூல் வாங்கிக் கொண்டு கடை நடத்த அனுமதி வழங்குகிறார் கள். ஒன்றிய அரசு சட்டப்படி தரைக்கடை வியாபாரிகள் பாதுகாக்கப்பட வேண்டி யவர்கள். வெண்டிங் கமிட்டி அமைக்கா மல், சம்பந்தப்பட்ட வியாபாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தாமல், மாற்று இடம் வழங்காமல், தரைக்கடைகளை அப்புறப்படுத்த கூடாது என்று சட்டத் தில் உள்ளது. அதை மதிக்காமல் திருச்சி மாநகராட்சி சட்ட விரோத செய லில் ஈடுபட்டு வருகிறது. மேலும் ஒன்றிய அரசின் சுவா திட்டத்தின்கீழ் தரைக்கடை வியாபாரி களுக்கு ரூ.1500 மானியத்துடன் ரூ.10, 000 கடனை தரைக்கடை வியாபாரி களுக்கு வழங்காமல் பல கோடி கடன் தொகையை ஏமாற்றி உள்ளனர். இத னால் உண்மையான தரைக்கடை வியா பாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலரின் கைகளுக்கு கடன் தொகை சென்றுள்ளதாக தெரிகிறது. எனவே இதுகுறித்து விசாரித்து தகுதியுள்ள வியாபாரிகளுக்கு கடன் வழங்க வேண்டும். தரைக் கடைகளை அப்புறப்படுத் தக் கூடாது. தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி தரைக்கடை, தள்ளு வண்டி வியாபாரிகள் டிசம்பர் 12 ஆம் தேதி கடை அடைப்பு மற்றும் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.