மயிலாடுதுறை, ஜன.21 - மயிலாடுதுறை மாவட் டம் திருக்கடையூர் பேருந்து நிறுத்தம் பின்புறம் ரயிலடி யில் (ஆணைக்குளம் கரை) வசிக்கக் கூடிய பட்டியலின சமூக மக்களின் குடியிருப் புக்களை சுற்றி, பிளாஸ்டிக் கழிவு, மருத்துவக் கழிவு, வீணாகிப் போன உணவுப் பொருட்கள் என திருக்கடை யூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒதுக்கப்படும் ஒட்டுமொத்த கழிவுகளை யும் கொட்டி வருவதால் கடு மையான துர்நாற்றம், தொட ரும் தொற்றுநோய்கள் உள்ளிட்ட பாதிப்பால் குறவர் சமூக மக்கள் கடும் இன்னல்க ளுக்கு ஆளாகி வருகின்ற னர். ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், சுகாதார சீர்கேடு குறித்து தெரிந்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் குப்பைக் கழிவு கள் மலை போல் குவிந்துக் கிடக்கின்றன. இதனை அப்பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த னர். 30-க்கும் மேற்பட்ட குற வர் சமூக குடும்பங்கள் வசிக் கும் ஆணைக்குளம் கரைப் பகுதியில் அடிப்படை வசதி கள் இல்லாத அவல நீடிக்கும் நிலையில், பட்டியலின மக்கள் வசிக்கின்றனர் என்பதாலேயே சுகாதார சீர் கேட்டை திட்டமிட்டு செய்து வருகிறார்களோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மருந்துக் கழிவிலிருந்து கடு மையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பல விதமான கழிவுகளை குடியிருப்பு களைச் சுற்றி கொட்டி வரு வது கடும் கண்டனத்திற்குரி யது. ஓரிரு நாட்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக ஐயப்பன் கூறியுள்ளார். ஆய்வின் போது விவ சாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.பரமசிவம், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ட்ரோ, ஒன்றிய செய லாளர் பிரவீன் ஆகியோர் உடனிருந்தனர்.