மயிலாடுதுறை, டிச.18 - மயிலாடுதுறையிலிருந்து (அரசு போக்கு வரத்து கழகத்திலிருந்து) புறப்படும் தடம் எண் 31 என்ற அரசு பேருந்து மயிலாடு துறை, பெருஞ்சேரி, கிளியனூர், கடக்கம், பெரம்பூர், சங்கரன்பந்தல், சேந்தமங்கலம் வழியாக திருவிடைக்கழி வரை இயங்கி வந்தது. போக்குவரத்து வசதியே இல்லாத குக்கி ராமங்கள் வழியாக சென்று வந்த இப்பே ருந்து, கடந்த 2018ல் வருவாய் இல்லை என காரணம் காட்டி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் அப்பேருந்தில் பயணம் செய்து வந்த பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள் மற்றும் அன்றாடம் வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் அந்த அரசு பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி பெரம்பூர் கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றியக் குழு உறுப்பினர் கே.விஜய ராகவன் தலைமையில் போராட்டம் நடை பெற்றது. ஒன்றிய செயலாளர் சி. விஜய காந்த், மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உரையாற்றினர். முன்னதாக போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன், மயிலாடுதுறை போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் ராமமூர்த்தி மற்றும் பெரம்பூர் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி, ஜனவரி 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்ட பேருந்தை தொடர்ந்து இயக்கு வதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதன்பேரில் சாலை மறியல் போராட்டத்தை ஆர்ப்பாட்டமாக நடத்தினர்.