தஞ்சாவூர், ஆக.22-
மனைப் பட்டா வழங்கக் கோரி செங்கிப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா டி.பி.சானி டோரியம், வன்னியம்பட்டி கிராமங்களில் வசித்து வரும், குடிமனை இல்லாத மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். நீண்ட காலமாக உள்ள குடி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். வன்னியம்பட்டி கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
சானிடோரியத்தில் இருந்து வன்னியம்பட்டி செல்லும் சாலையில், இரு புறமும் தண்ணீர் தேங்கா மல், ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் வசதி ஏற் படுத்த வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் டி.பி.சானி டோரியம், வன்னியம்பட்டி கிளைகள் சார்பில், செங் கிப்பட்டி கிராம நிர்வாக அலு வலகம் முன்பு திங்கட் கிழமை மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பி. பன்னீர்செல்வம், ஏ.வெங்க டேஸ்வரி தலைமை வகித்த னர். ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.