districts

img

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவர்களை கூடுதலாக நியமிக்க கோரிக்கை

அரியலூர், ஜன.19- அரியலூர் மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவர்கள் இல்லாததால் பெற் றோர்கள் சிரமத்துக்கு உள்ளாகி யுள்ளனர். ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து குழந்தை க்கு அதிகப்படியான வயிற்றுப்போக்கு காரணமாக மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக ஏராளமான பெற்றோர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.  மேலும் பல பெற்றோர்கள் குழந்தை களுக்கு உரிய முறையான சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருவதாக வும் இதே நிலைமை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குழந்தை களின் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதாரத் துறை உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து நேரங்க ளிலும்  குழந்தைகள் மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் சிறப்பு  பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கூடுதலாக இரண்டு குழந்தை நல மருத்துவர்களை  ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள் ளனர்.