மயிலாடுதுறை, பிப்.11 - மயிலாடுதுறை முதல் தரங்கம்பாடி வழி யாக, காரைக்கால் வரை நீட்டித்து மீண்டும் ரயில் சேவையை துவங்குவதற்காக, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ரயில்வே துறை அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை முதல் மன்னம்பந்தல், செம்பனார்கோவில், ஆக்கூர், திருக்கடை யூர் வழியாக தரங்கம்பாடி வரை ஆங்கிலே யர் ஆட்சி காலத்தில் 1926 ஆம் ஆண்டு ரயில் சேவை துவங்கப்பட்டு இயங்கி வந்தது. இத னால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பயன்பெற்றனர். இந்நிலையில் 1986 ஆம் ஆண்டு பாதையை அகலப்படுத்துவதாகக் கூறி ரயில்வே நிர்வாகம் ரயில் சேவையை திடீ ரென நிறுத்தியது. மீண்டும் ரயில் சேவையை துவங்கி காரைக் கால் வரை சேவையை நீட்டிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப் புகள் பல ஆண்டுகளாக ஒன்றிய அரசுக்கும் ரயில்வே துறைக்கும் பல்வேறு போராட்டங்கள் வாயிலாக கோரிக்கைகளை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, மீண்டும் ரயில் சேவை தொடங்குவதற்காக சனிக்கிழமை மாலை தரங்கம்பாடி அருகே உள்ள ரயில் வழித்தடம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கள ஆய்வு மேற்கொண்டார். கடந்த மாதம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாவட்டம் முழுவதும் சைக்கிள் பிரச்சார பயணம் மேற்கொண்டு, கோரிக் கைகளை வலியுறுத்தி திருக்கடையூரில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.