districts

img

பொதுப் பணித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 27-  தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர் சங்கம் சார்பில் செவ்வாய் அன்று திருச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  உதவியாளர் நேரடி நியமனம், 50 சதவீதம் தேர்வாணையம் மூலம் நியமனம் செய்வதை ரத்து செய்து 2017 முதல் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறைகளில் காலியாக உள்ள 450-க்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் உடனே நிரப்ப வேண்டும். பதவி மாற்றம் மூலம் இளநிலை வரைத்தொழில் அலுவலர் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான அரசாணை 69 ஐ ரத்து செய்து, ஏற்கனவே அமலில் இருந்த விதிகளின்படி அனைத்து நிலை அலுவலர்களுக்கும் பதவி மாற்றம் மூலம் இளநிலை வரை தொழில் அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ரெங்கப்பன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி, மாவட்டச் செயலாளர் நவநீதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்க மாநிலப் பொதுச் செயலாளர் கோமதிநாயகம் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் கோடைமழை குமரன் நன்றி கூறினார். பின்னர் திருச்சி மண்டல தலைமை பொறியாளரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.