districts

img

தலைவர்கள், அமைச்சர்கள் பாராட்டிய மாதிரவேளூர் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டிடம் எப்போது கட்டப்படும்?

சீர்காழி, டிச.5 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் அருகே மாதிரேவளூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு அப்போதைய முதல்வராக இருந்த காமராஜர் அடிக்கல்  நாட்டி பள்ளி கட்டிட பணியை துவக்கி  வைத்தார். பின்னர் கல்வி அமைச்சராக இருந்த  பக்தவச்சலம் இப்பள்ளியை கடந்த  1962 ஆம் ஆண்டு துவக்கி வைத்தார்.  ஆளுநர் பட்வாரி, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட பெரும் தலைவர்கள், அமைச் சர்கள் இப்பள்ளிக்கு வந்து பள்ளியின் பெருமையை பாராட்டியுள்ளனர். அந்த ளவுக்கு சிறப்பான பள்ளியாக இருந்து வந்துள்ளது.  இப்பள்ளி பல சாதனையாளர்களை உருவாக்கி இருக்கிறது. ஆனால் கடந்த  15 ஆண்டுகளில் படிப்படியாக குழந்தை களின் எண்ணிக்கை குறைந்து, தற்போது இங்கு ஒன்றாம் வகுப்பு முதல்  ஐந்தாம் வகுப்பு வரை 60-க்கும் மேற்பட்ட  குழந்தைகள் மட்டுமே கல்வி பயின்று  வருகின்றனர். இப்பள்ளிக் கட்டிடத்தின்  வயது 62 ஆண்டுகள்.

இந்த கட்டிடத்தின்  ஆயுட்காலமும் முடிந்து விட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் பழுத டைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகள் மாற்று இடத்தில் தங்க வைக்கப்பட்டு வகுப்பு நடைபெற்று வரு கிறது.  கடந்த 10 ஆண்டுகளாக புதிய பள்ளி  கட்டிடம் கட்டி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அங்கு பயின்று வரும் குழந்தை கள் கோயில் மற்றும் திடல் பகுதியில் எந்த அடிப்படை வசதியுமின்றி அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வரு கிறது.  இதுகுறித்து கடந்த காந்தி ஜெயந்தி  அன்று மாதிரவேளூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளி கட்டிடத்தை புதுமையாக கட்ட வும் பள்ளி தரத்தை மேம்படுத்தவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை யாக உள்ளது.