districts

img

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கும்பகோணம், பிப்.17- மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் மூர்த்தி கலையரங்கத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்  ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட 32 பய னாளிகளுக்கு ரூ.3.84 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர்  எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்ட மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். பெரம்பலூர் பெரம்பலூர் ஜே.கே. மஹாலில் நடந்த  நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர்  சா.சி.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் ஆகியோர், 1,320 பயனாளிகளுக்கு ரூ.2.20  கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கற்றனர். கரூர் கரூரில் நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டத்தில் ரூ.2.089 கோடி மதிப் பீட்டில் 837 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி களை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வழங்கினார்.