புதுக்கோட்டை, மார்ச் 13 - கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட செங்களூர் கிராமத்தில் புதன் கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகா மில் 405 பயனாளிகளுக்கு ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம், கிள்ளுக்கோட்டை சரகம் செங்களூர் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை களின் சார்பில், 405 பயனாளிகளுக்கு ரூ.1,03, 70,870 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலு வலர் மா.செல்வி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, குன்றாண் டார்கோவில் ஒன்றிய குழுத் தலைவர் பாண்டிச்செல்வி, கே.ஆர்.என்.போஸ், வட்டாட்சியர் கவியரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.