districts

img

மன்ற போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

அறந்தாங்கி, பிப்.23 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல் குடி வட்டார வளமை யத்தில் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ராஜேஸ்வரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) சண்முகம் ஆகியோர் தலைமையில் விழா தொடங் கியது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவ யோகம் வரவேற்றார். மன்ற போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் பரு வத்தில் நடைபெற்ற இலக்கிய மன்றத்தில்  பேச்சுப் போட்டி,  கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வானவில் மன்றம் அறிவியல் செயல்திட்டம், வினாடி வினா, சிறார்  திரைப்படம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரி யர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுநர் முத்துராமன் நன்றி  கூறினார்.