districts

திருச்சி முக்கிய செய்திகள்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திருநாவுக்கரசர் எம்.பி. தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி, செப்.10 - திருச்சியில் ஞாயிறன்று நடந்த தந்தை பெரியார் கல்லூரியில் மாபெரும் இலவச தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை திருநாவுக்கரசர் எம்பி., தொடங்கி  வைத்து பணி நியமன ஆணை வழங்கி பேசினார்.  அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவில் வேலை யில்லா திண்டாட்டம் முக்கிய பிரச்சனையாக உள்ளது. நாட்டில் 20 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக் கிறார்கள்.  மாநில அரசு வேலை வாய்ப்புகள் வழங்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. படித்து முடித்து  வேலை தேடும் இளைஞர்கள் உங்களுடைய தனித்திறமை களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பினை  இளைஞர்கள் பயன்படுத்தி முன்னேறிச் செல்ல வேண்டும்”  என்றார்.  வேலைவாய்ப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறு வனங்கள் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளியில் விளையாட்டு விழா

பாபநாசம், செப்.10 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த ராஜகிரி யில், தான்ஸ்ரீ உபயதுல்லா மேல்நிலைப் பள்ளியில் 30  ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. விழாவில், ராஜகிரி காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்க நிறுவன தலைவர் முபாரக் ஹீசைன்  தலைமை வகித்துப் பேசினார். பள்ளி தாளாளர் நூர்முக மது, பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் முகமது பாரூக்  முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் விமலா வரவேற் றார். பூண்டி புஷ்பம் கல்லூரியின் முன்னாள் அறிவியல் புல  தலைவர் டாக்டர் ராபர்ட் அலெக்ஸ்சாண்டர் போட்டி களில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்  வழங்கிப் பேசினார். பின்பு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் குணசேகரன் நன்றி  கூறினார்.

புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

பொன்னமராவதி, செப்.10- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி கிராமத்தில் சென்னை அடையார் புற்று நோய் மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையின் சார்பாக ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம் மற்றும் விழிப்பு ணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி தலைமை வகித்தார். மருத்துவக் குழுவினர் புற்றுநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்பு, புற்றுநோய் சம்பந்தமான மருத்துவ ஆலோச னையும் சிகிச்சையும் வழங்கப்பட்டது. இதில் திட்ட மேலா ளர் வெங்கடேஷ், துணைத்தலைவர் ரோஜாபானு, வார்டு  உறுப்பினர் மகபத்நிஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.13.24 கோடிக்கு தீர்வு

தஞ்சாவூர், செப்.10 - தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் ரூ. 13.24 கோடிக்கு  தீர்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும்  மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையி லுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காக  தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.  இந்நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தலைமை வகித்தார். கூடுதல் சார்பு நீதிபதி எம்.முருகன், மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.கீதா,  வழக்குரைஞர் எஸ்.மகா சண்முகம் ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் உரிமையியல், குற்றவியல், குடும்ப  நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மோட்டார் வாகன வழக்குகள் நீதிமன்ற சிறப்பு சார்பு  நீதிபதி எஸ்.தங்கமணி, மூன்றாவது குற்றவியல் நீதித்துறை  நடுவர் சி.பாரதி, வழக்குரைஞர் ஏ.எலன்ரோஸ் ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து  வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றுடன் கும்பகோ ணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு  ஆகிய வட்ட சட்டப் பணிகள் குழுவின் அமர்வுகளிலும் விசா ரணை நடத்தப்பட்டது.  இதன்மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3,337 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,468 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.13,24,29,836 அளவுக்கு இழப்பீடு மற்றும்  தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

பாதுகாப்பு கேட்டு  காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

பெரம்பலூர், செப்.10 - பாதுகாப்பு வழங்கக் கோரி காதல் ஜோடி பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் மங்களூர் பேட்டை கிராமம், தெற்குத்தெரு ரமேஷ்-விஜி தம்பதி யினரின் 3வது மகன் நமச்சிவாயம் (24). 10 ஆம் வகுப்பு வரை  படித்துள்ள இவர், கோவில் ஸ்தபதியாக வேலை செய்து வருகிறார்.  இந்நிலையில் அதே ஊர், அதே தெருவைச் சேர்ந்த எதிர்  வீட்டில் வசித்து வந்த மருதைமுத்து - ராதா தம்பதியின் மகள்  அனிதாவை (23), கடந்த 5 வருடமாக நமச்சிவாயம் காதலித்து  வந்துள்ளார். அனிதாவும் நமச்சிவாயத்தை காதலித்து வந்துள்ளார்.  இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ப தால், அனிதாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு  தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை நமச்சிவாய மும், அனிதாவும் வீட்டை விட்டு வெளியேறி, ஞாயிறன்று சமூக  செயல்பாட்டாளர் சத்தியபிரபு உள்ளிட்ட அவரது நண்பர்கள்  முன்னிலையில், பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீகரடி முனியப்பன் கோவி லில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த இவர்கள், பெற்றோர் உள்ளிட்ட உறவி னர்களிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு அளித்திட கோரி பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்ச மடைந்தனர். இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வரும்  போலீசார், நமச்சிவாயம்-அனிதா தம்பதியினரின் பெற்றோரை  பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வரவ ழைத்து சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி அரசு மருத்துவமனையில்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

தேனி, செப்.9- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழனன்று  தேனி மாவட்டத்தில் பல்வேறு  நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு  தேனி  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள்ள பொது-தனி யார்  ஒப்பந்தத்தில் செயல்பட்ட கிருஷ்ணா ஸ்கேன் பரிசோதனை மையம் ஆய்வு  செய்யப்பட்டது. அங்கிருந்த நோயாளிகளி டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விசாரணை நடத்தினார். இதில் 10 பேரில் 7  பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு  ஸ்கேன் பரிசோதனை செய்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து ஸ்கேன் மையத் தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய அவர்  உத்தரவிட்டார். மேலும் தேசிய நல வாழ்வு குழுமத்தின் மூலம் புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் வரவழைக்கவும், அதற் கான பணியாளர்களை நியமிக்கவும்  அமைச்சர் அறிவுறுத்தினார்.

போக்குவரத்து துறையில்  காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

அமைச்சர் சிவசங்கர் பேட்டி கடலூர்,செப்.10- போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். கடலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதா வது:- கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான  தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாண வர்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளி லும் புதுமைப்பெண் திட்டத்தால் மாண வர்கள் அதிகம் அரசு கல்லூரிகளில் சேர்ந்து  வருகின்றனர்.  இதனால், பள்ளி-கல்லூரி மாணவர் களுக்கு தேவைப்படும் அளவுக்கு பேருந்து  வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்  என்று முதலமைச்சர் அறிவுறுத்தியிருக் கிறார். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. சென்னையில் 100 மின்சார பேருந்து இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு  வருகிறோம். இதற்காக விரைவில் ஒப்பந்தப்  புள்ளிகள் கோரப்படும். இந்த திட்டம் படிப்படி யாக நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப் படும். தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்கு வரத்து கழகத்தில் 685 பணியிடங்களை நிரப்பு வதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பம்  பெறப்பட்டு வருகிறது. மற்ற போக்குவரத்து  கழகத்தில் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.

இதரக் கட்சிகளிலிருந்து விலகி  200 பேர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

இராமநாதபுரம், செப்.10- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா தீயனூர் ஊராட்சி வெற்றிநகரில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 200 பேர் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந் தனர்.  தீயனூர் ஊராட்சியில் காணிக்கர் பழங்குடி பிரிவைச் சேர்ந்த 300 பேருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை யீட்டால் பழங்குடியின சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர மார்க்  சிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்து போராடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பாஜக உள் ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, தங்க ளுக்காக போராடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைவது என முடி வெடுத்து 200 ஆண்களும், பெண்களும் தங்களை கட்சியில் இணைத்து கொண்ட னர்.  இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் பரமக்குடி தாலுகா செயலாளர் தி.இராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.காசி நாததுரை, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் வி.மயில்வாகணன், மாவட்டக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, தாலுகா குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.முரளி, ராமச் சந்திரன், முனியசாமி ஆகியோர் பங் கேற்றனர்.

பணியிட மாறுதல்-கலந்தாய்வு நடத்த வேண்டும் 

அரசு மருத்துவ துறை நிர்வாக ஊழியர்கள் கோரிக்கை

கடலூர், செப்.10- நடப்பாண்டிற்கான அனைத்து நிலை நிர்வாக ஊழியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுகள், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது மாநிலத் தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் நம்பிராஜன், மாநில பொருளாளர் அசோகன்,  அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- அத்தியாவசிய துறையாக இருக்கக்கூடிய மருத்துவத் துறையில் காலியாக உள்ள நிர்வாக ஊழியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களுக்கு நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம், அதற்குரிய அனைத்து நிர்வாக ஊழியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்

சென்னை, செப்.10- சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோ கன் சிங், முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி விரைவாகப் துறைமுகத்திற்கு சென்று வர இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கருதப்பட்டது. இந்நிலையில் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பிரச்சினை ஏற்படும் எனக்கூறி ெஜயலலிதா இந்த திட்டத்தை முடக்கினார். பின்னர் 10 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் இருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததை அடுத்து அந்த திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது.  இதையடுத்து உயர்மட்ட சாலை அமைக்க தமிழ்நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒப்பந் தம் கையெழுத்தானது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால்  பணிகள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால் தாமதமானது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இத்திட்டம் முதலில் ரூ.3,204 கோடியில் செயல்படுத்த  முன்மொழியப்பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட மேம்பாலம் இரண்டு நிலை களை (டபுள் டெக்கர்) மறுவடிவமைப்பு செய்யப்பட்டதால் பின்னர் ரூ.5,721.33 கோடியாக மாற்றப்பட்டது.  மேம்பால பணிகள் 4 பகுதிகளாக பிரித்து செயல்படுத்தப்படுகிறது. மேம்பாலத்தின் மொத்த நீளம் 20.565 கி.மீ. ஆகும். இந்த சாலைக்கு சுற்றுச்சூழல், ரயில்வே துறை, கடலொர ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தின் ஒரு பகுதி இரட்டைதளம் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை ஆய்வு செய்த ஒன்றிய மந்திரி  கட்கரி, அனைத்து நெடுஞ்சாலைப் பணிகள்  சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்த உள்ளதாகவும் தெரிவித்தார்.