திருச்சிராப்பள்ளி, நவ.22 - திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சப்பூ ரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், பல்வகை பயன்பாட்டு வசதிகளுக்கான சேவை மையம், கனரக சரக்கு வாகன முனை யம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகள் ரூ.492.55 கோடி மதிப்பீட்டில் முடிவடையும் நிலையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைவுபடுத்தும் வித மாக வியாழனன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தனியார் சொகுசு பேருந்துகளுக்கென தனியாக பேருந்து நிலையம் ஏதும் இல்லை. தனியார் சொகுசு பேருந்து நிலையம் இல்லாததால், மத்திய பேருந்து நிலைய பகுதி சாலை ஓரங்களில் போக்குவரத்துக் கும், பயணிகளுக்கும், இடையூறாக இப்பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி வருகின்றனர். இந்நிலையை மாற்றும் விதத்தில், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனை யம் வளாகத்தின் அருகே சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் வெளியூர் செல்லும் தனியார் சொகுசு பேருந்து நிலையம் ரூ.17.60 கோடி யில் (மூலதன மானிய நிதி ரூ.8.80 கோடி மற்றும் மாநகராட்சி நிதி ரூ.8.80 கோடி) அமைப்பதற்கான திட்டப் பணிகளை அமைச்சர் நேரு வியாழனன்று தொடங்கி வைத்தார். புதிதாக அமையுவுள்ள இப்பேருந்து நிலையம், 2 நடைமேடைகள் 30849 சதுரடி பரப்பளவிலும், பேருந்து போக்குவரத்துக் காக 142945 சதுரடி பரப்பளவிலும், 82 பேருந்து நிறுத்த தடங்களும், இதில் இயக்கப்படும் பேருந்து நிறுத்த தடங்களின் எண்ணிக்கை 37 ஆகவும், காத்திருப்பு பேருந்து தடங்கள் எண்ணிக்கை 45 ஆக வும் இருக்கும் வகையில் அமையவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகளை விரைவாக வும், தரமாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மா.பிர தீப் குமார், மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், அரசு துறை உயர் அலுவலர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.