புதுக்கோட்டை, செப்.5 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி, திருவரங் குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செவ்வாய்க் கிழமை மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கியதோடு, பல்வேறு திட்டப் பணிகளை யும் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார். திருவரங்குளம் ஒன்றி யம், நெடுவாசல், எல்.என்.புரம், மாங்காடு, வடகாடு ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 327 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி களை அமைச்சர் வழங்கி னார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ், அறந்தாங்கி ஒன்றியம், தொழுவங்காடு, சுனையக்காடு, அழியா நிலை ஊராட்சி, திருவரங் குளம் ஒன்றியம், கீழாத்தூர் ஊராட்சி ஆகிய இடங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கீழாத் தூர் ஊராட்சியில், சாலை அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.